districts

img

கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வலியுறுத்தல்

உடுமலை, ஜன.22- அரசு ஊழியர்கள் சிகிச்சை பெறும் போது கட்டணம் வசூல் செய் யாமல் முழுமையாக காப்பீட்டு நிறு வனமே மருத்துவமனைக்கு பணத்தை தர வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி திங்கட்கிழமை உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு  அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய் தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப் பீடு திட்டம் என்ற பெயரில் பணம் பறிக் கும் திட்டத்தை நடைமுறைப்படுத் தும் மெடி அசிஸ்ட் யுனைடெட் இன்சூ ரன்ஸ் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக் கையை முன் வைத்து ஆர்ப்பாட்டம்  நடத்தினார்கள். இந்த கோரிக்கை மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் பிப். 2  ஆம் தேதி அரசு ஊழியர்கள் யுனை டெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் திருப்பூர் மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் படும் என தெரிவித்துள்ளனர். உடுமலை வட்டாட்சியர் அலுவ லகத்தின் முன்பு நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட் டகிளை துணைத் தலைவர் எலி சபெத் தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் பாலசுப்பிரமணியன், வட்டகிளை செயலாளர் வெங்கிடு சாமி, வருவாய்த்துறை சங்கத்தின் மதன், வேளாண்துறை சங்கத்தின் வைரமுத்து, சத்துணவு ஊழியர் சங் கத்தின் புஷ்பவள்ளி, வட்டகிளை பொருளாளர் பெரியசாமி உட்பட திர ளான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். மடத்துக்குளம்: மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட கிளைத்தலைவர் சிவக்குமார்  தலைமை வகித்தார். மாவட்டப்  பொருளாளர் முருகசாமி, வட்ட கிளைச் செயலாளர் பாலு, வட்ட கிளை துணைத் தலைவர் கணேஷ், வட்டகிளைப் பொருளாளர் கதிரவன்  மற்றும் அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்கத்தின் கருணாநிதி  உட்பட திரளான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவிநாசி:  அதேபோல அவிநாசியில் வட் டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்ட கிளைச் செயலாளர் கருப்பன், வட்ட கிளை இணைச் செயலாளர் வினோத்  குமார், மாவட்ட இணைச் செயலாளர்  ராமன், நிர்வாகி ராஜேந்திரன் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.