ஈரோடு, ஜூலை 23- பிஎஸ்என்எல்-க்கு 4 மற்றும் 5ஜி சேவை வழங்க வேண்டும் என பிஎஸ் என்எல் ஒப்பந்த தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க ஈரோடு மாவட்ட 6ஆவது மாநாடு பெருந்துறை தொலைபேசி நிலையத்தில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் எம். சையது இத்ரீஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.பழனிச்சாமி வரவேற்றார். மாநில துணைத் தலைவர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம், ஏஐபிடிஏ மாவட்டச் செயலாளர் பி. சின்னச்சாமி, பிஎஸ்என்எல் பொது மேலாளர் எஸ்.கிருஷ்ணகுமார் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர் சி.பரமசிவம் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். பிஎஸ்என்எல்லில் பணி புரியும் ஒப் பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். கிளாஸ்டர் முறை யினை ரத்து செய்ய வேண்டும். ஒப் பந்தத் தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் 7ஆம் தேதி சம்பளம் வழங்க வேண்டும். ஆட் குறைப்பு செய்யக் கூடாது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கும் கொள்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். பிஎஸ்என்எல்க்கு 4ஜி , 5ஜி சேவை வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இபிஎப், ஈஎஸ்ஐ வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதையடுத்து நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்டத் தலைவராக ஆர்.சிவக்குமார், மாவட்டச் செயலா ளராக கே.பழனிச்சாமி, மாவட்டப் பொருளாளராக சரவணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிஎஸ்என்எல் இயு மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.செல்வராஜன், மாவட்டச் செய லாளர் எஸ். பாலு ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்டப் பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.