districts

img

வால்பாறை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை உறுதிசெய்க

பொள்ளாச்சி, ஜன.11- வால்பாறை அரசு மருத்துவம னையில் தேவையான அனைத்து அடிப் படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் என நோயாளிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத் தப்பட்டது. வால்பாறை அரசு மருத்துவமனை  நோயாளிகள் நலச்சங்கத்தின் ஆலோ சனை கூட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சி யர் அலுவலகத்தில் செவ்வாயன்று  சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமையில் நடைபெற்றது. இதில், வால்பாறை அரசு மருத்துவ மனையின் குறைபாடுகள் குறித்தும், தேவைகள் குறித்தும்  நோயாளிகள் சங்கத்தின் உறுப்பினர்களிடம் சார் ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது, வால்பாறை நோயாளி சங்கத்தின் உறுப்பினரும், சிஐடியு வால்பாறை பகுதி செயலாளருமான பி.பரமசிவம் கலந்து கொண்டு பேசு கையில், வால்பாறை அரசு மருத்துவ மனையில் காலியாக உள்ள மருத்து வர்கள் மற்றும் செவிலியர், தூய்மை பணியாளர்கள், எக்ஸ்ரே தொழில் நுட்ப பணியாளர்கள், ஆம்புலன்சு ஓட்டுநர்கள் உள்ளிட்ட காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண் டும். ரத்த வங்கியை முழுமையாக செயல்பட வேண்டும். மின்சாரம் அடிக் கடி தடைபடுவதால் ஜெனரேட்டர் வசதி உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும். தொழிலாளர்களின் குடும் பங்கள் பயன்பெறும் வகையில் அனை வருக்கும் தமிழக அரசின் காப்பீடு திட்ட அட்டை வழங்க தனியாக முகாம் நடத்திட வேண்டும். தனியார் மருத்து வமனைகளில் அரசின் காப்பீடு திட்டம்  செயல்படுவதை உறுதி செய்ய வேண் டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த பொள்ளாச்சி சார் ஆட்சி யர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் கூறு கையில், வால்பாறை நோயாளிகள் சங்கத்தின் கோரிக்கைகளை ஒவ் வொன்றாக தீர்வு காண்போம். வால் பாறை அரசு மருத்துவமனைக்கு தேவைப்படும் மருத்துவ உபகர ணங்களை உறுதி செய்ய உரிய ஏற் பாடு செய்யப்படும், என்றார். முன்னதாக, இந்த கூட்டத்தில்  வால் பாறை  முதன்மை மருத்துவ அலுவ லர் நவரத்தினம் மற்றும் வால்பாறை வட்டார மருத்துவ அலுவலர் பாபு லட்சு மணன், யோகா மற்றும் இயற்கை முறை மருத்துவர் கார்த்திகேஷ்,  மருந் தாளுநர் கிரி மற்றும் சிஐடியு வால் பாறை பகுதிச் செயலாளர் பி.பரம சிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.