திருப்பூர், மே 30– சிஐடியு அமைப்பு தினமான மே 30 அன்று திருப்பூர் மாவட்டத்தில் மறைந்த மூத்த தோழர் என்.ஆறுமுகம் நினைவு நாள் பல்வேறு இடங் களில் உணர்வுப்பூர்வமாக கடைப்பிடிக்கப்பட் டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், சுமைப்பணித் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகியாக வும், கம்யூனிஸ்ட் நெறிமுறைப்படி எளிமை, அடக்கத்திற்கு இலக்கணமான செயல்பட்ட என். ஆறுமுகம் நினைவு நாள் திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவல கமான தியாகி பழனிசாமி நிலையம், அரிசிக் கடை வீதி, பி.ஆர்.நிலையம், கூட்செட் சங்க வளாகம், ஜம்மனை, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் திங் கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. மேற்கண்ட பகுதிகளில் தோழர் என்.ஆறு முகம் உருவப்படம் வைக்கப்பட்டு மாலை அணி வித்து அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத் தினர். அவரது பணிகளை நினைவு கூர்ந்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத் தலைவர் எம்.ராஜகோபால், மாவட்ட சிஐடியு மற்றும் சுமைப்பணி தொழிலாளர் சங்கச் செயலாளர் கே.உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். இந்த நிகழ்வில் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, தெற்கு மாநகரச் செய லாளர் டி.ஜெயபால், பனியன் சங்கச் செயலாளர் ஜி.சம்பத், சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி.பாலன் மற்றும் பல்வேறு பகுதிக ளில் வேலை செய்யும் சுமைப்பணித் தொழிலாளர் கள் உள்பட கட்சி அணியினர் கலந்து கொண்டு அவருக்கு உணர்வுப்பூர்வமாக அஞ்சலி செலுத் தினர்.