தாராபுரம், ஜூன் 9- மயான ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தாராபுரம் 4 ஆவது வார்டு பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் நகராட்சி 4 ஆவது வார்டிற்குட்பட்ட சித்தராவுத்தன்பா ளையம் மேற்கு தெரு மற்றும் ஓடைத்தெருவில் வசித்து வரும் பொதுமக்களின் மயான பூமியை சில தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ள னர். மேலும், சடலங்களை புதைக் கவிடாமல் தகராறு செய்வதாக கூறி வட்டாட்சியர் அலுவலகத்தை முற் றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடு பட்ட ஆறுமுகம் என்பவர் தெரி விக்கையில் கடந்த 100 ஆண்டுக ளுக்கும் மேலாக இரண்டு சமுதா யங்களை சேர்ந்த பொதுமக்கள் இப் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை மயானமாக பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக குறிப்பிட்ட சில தனிநபர்கள் மயான நிலத்திற்குள் புகுந்து கல்லறைகளை இடித்து குடிசைகள் அமைத்து சடலங்களை புதைக்கவிடாமலும் பிரச்சினை செய்து வருகின்றனர். கடந்த 8.10.21 அன்று பழனியப்பன் என்பவரது மனைவி கருப்பாயி இறந்தபோதும், 27.11.21 அன்று சடையப்பன் என்ப வரது மகன் பழனியப்பன் இறந்தபோ தும் நாங்கள் பயன்படுத்தி வரும் மயானபூமியில் குழி தோண்ட விடா மல் தடுத்தனர், பல மணி நேரம் போராடி அடக்கம் செய்தோம். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் நடை பெறுகிறது. இதன் காரணமாக சாதி யரீதியான மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வருவாய்துறை, காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல்வேறு முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வட்டாட்சியர் அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டுள்ளோம் என தெரிவித்தார். போராட்டத்தையடுத்து வட்டாட்சி யர் ஜலஜா பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப் போது 1 வாரத்தில் வருவாய்துறை அளவையாளர்கள் மயான புறம் போக்கு நிலத்தை அளந்து கம்பி வேலி அமைக்க நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத் திவைத்தனர்.