நகை கடையில் கொள்ளை: ஒருவர் கைது!
நகை கடையில் கொள்ளை: ஒருவர் கைது! கோவை, ஏப்.28- கோவை நகைக் கடையில் இருந்து 50 பவுன் தங்க நாணயங்களைத் திருடிவிட்டு தப்பிய இளைஞர் தனிப்படை போலீசாரால் மதுரையில் கைது செய்யப்பட்டார். கோவை, சொக்கம்புதூரைச் சேர்ந்தவர் அருண்குமார் மனைவி ஸ்ரீதேவி (44). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் புதிதாக நகைக் கடை திறந்து நடத்தி வந்தார். இந்தக் கடையின் மேலாளராக பிச்சாண்டி என்பவரும், கடையின் ஊழியராக திருநெல் வேலி மாவட்டம் ராவணசமுத்திரம் அம்மன் கோயில் வீதி யைச் சேர்ந்த முத்துகுமார் (28) என்பவரும் இருந்து வந்த னர். பிச்சாண்டியுடன் ஒரே அறையில் தங்கி இருந்த முத்துகு மார், நகைக் கடையை சுத்தம் செய்வதாகக் கூறி கடை சாவியை வியாழக்கிழமை எடுத்துச் சென்றார். சிறிது நேரம் கழித்து பிச்சாண்டி நகைக் கடைக்கு வந்தபோது அங்கு முத்துகுமாரைக் காணவில்லை. அத்துடன் கடையில் இருந்த 50 பவுன் தங்க நாணயங்களும் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர் ஸ்ரீதேவி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீ சார் அங்கு வந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, தங்க நாணயங்களை முத்துகுமார் திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து முத்துகு மாரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், மதுரையில் பதுங்கியிருந்த முத்துகு மாரை தனிப்படை போலீசார் சனிக்கிழமை கைது செய்த னர். அவரிடமிருந்து 50 பவுன் தங்க நாணயங்களும் மீட்கப் பட்டன.
கோடை வெயிலை போக்க ஆனந்த குளியலிடும் யானைகள்
கோடை வெயிலை போக்க ஆனந்த குளியலிடும் யானைகள் நீலகிரி, ஏப்.28- கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், முதுமலையில் வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் ஆனந்த குளியலிட் டன. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்தில் வெயில் அதிகமாக காணப்படும். குறிப்பாக, கூடலூர், பந்த லூர் மற்றும் முதுமலை போன்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும். இம்முறை கோடை மழை பெய்யாத நிலையில், நீலகிரி மாவட்டம் முழுவதுமே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது, முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. இதனால், புலிகள் காப்பத்திற்குட்பட்ட பகுதிகளில் வாழும் வனவிலங்குகள் நீர் நிலைகளை தேடிச் செல்ல துவங்கிவிட்டன. இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத் திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள யானைகள் வெயிலை தணிக்க அங்குள்ள மாயார் ஆற்றில் சென்று ஆனந்த குளியல் போடுவதை வாடிக்கை யாக கொண்டுள்ளன. ஆழமான பகுதிகளுக்குள் சென்று, தண்ணீரை தும்பிக்கையால் எடுத்து உடல் முழுவதும் வாரி வீசி விளையாடி வருகின்றன. மேலும், முதுமலை செல்லும் சுற்றுலா பயணிகள் வளர்ப்பு யானைகள் ஆற்றில் ஆனந்த குளியல் போடுவதை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத் தும் மகிழ்கின்றனர்.
வெள்ளியங்கிரி மலையில் தொடரும் சோகம் – மேலும் ஒருவர் மரணம்
கோவை, ஏப்.28- கோவை வெள்ளியங்கிரி மலையில், மேலும் ஒருவர் மூச்சுத் திணறி உயிரி ழந்தார். ஒரே மாதத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்துள்ளது. ஏழு மலைகளை தாண்டி உள்ள கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வரு கின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப் பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஞாயிறன்று பிற்பகல் சுமார் 12 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 நபர்கள் வந்து அடிவாரத்தில் தரிசனம் முடித்து, மலை ஏற தொடங்கினார். அப்போது. புண்ணியக்கோடி என்பவர் ஒன்றாவது மலையில் 200 படிக்கட்டுகள் ஏறியவுடனே வயிறு வலி வந்தது. தொடர்ந்து, வாந்தி எடுத்த அவர், கீழே அழைத்து செல்லப்பட்டு மாலை 5 மணிக்கு ஆலந்துறை பகுதியில் உள்ள பூலுவபட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்க னவே உயிரிழந்தவிட்டதாக தெரிவித்த னர். இதுகுறித்து ஆலந்துறை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிகிச்சைக்கு வந்த முதியவர் திடீர் மாயம்
கோவை, ஏப்.28- கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த முதியவர் மாயமானார். அவரை போலீஸார் தேடி வரு கின்றனர். ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி மூடுதுறை ஊராட்சி, பழயூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60). இவர் நரம்பு பிரச்சனை தொடர்பாக வீட்டில் இருந்த வாறே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை யில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு தனது மனைவி ஜோதிமணியு டன் (56) கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி வந்தார். அங்கு மருத்துவமனை எதிரே உள்ள பாலத்தின் அருகே தனது மனைவியை அமரச் சொல்லிவிட்டு அருகில் உள்ள ஒரு கடை யில் தேநீர் குடித்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றார். ஆனால், அதன் பின்னர் அவா் திரும்ப வரவில்லை. அவரது மனைவி ஜோதி மணி அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவரைக் காணவில்லை. இது குறித்து பந்தயசாலை காவல் நிலை யத்தில் ஜோதிமணி கடந்த 26 ஆம் தேதி கொடுத்தார். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், முதியவர் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் பேருந்தின் சக்கரத்தில் பாய்ந்த நபர்
கோவை, ஏப்.28- கோவையில் தனியார் பேருந்தின் சக்க ரத்தில் பாய்ந்த நபர் தலைநசுங்கி உயிரி ழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ்ளது. கோவை சாய்பாபா காலனி கருப்புசாமி வீதி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவ ரது மகன் ஆனந்த். சற்று மனநலம் பாதிக் கப்பட்ட நிலையில் இருந்த அவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனையும் இருந்துள்ளது. இதை அடுத்து கடந்த 21ஆம் தேதி இரவு அவரது தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா ஆகியோர் ஆனந்தை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளை யம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்து வமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த தனியார் நகரப் பேருந்து முன்பாக பாய்ந் துள்ளார். இந்த சம்பவத்தில் பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக கோவை மேற்கு சரக போக்குவ ரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது!
கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது! கோவை, ஏப்.28- கோவையில் கத்தியை காட்டி மிரட்டி பைனான்சியரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை துடியலூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(33). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் வெள்ளி யன்று, தனது நண்பர் ஒருவரை பார்க்க ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம டைந்த அந்த வாலிபர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1200 ஐ பறித்து தப்பி செல்ல முயன்றார். உடனே, கார்த்திகேயன் சத்தம் போட, அதை கேட்டு சிலர் ஓடி வந்த னர். அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டி ‘‘நான் இந்த ஏரியாவில் பெரிய ரவுடி” எனக்கூறி அந்த வாலிபர் தப்பி சென்றார். இதைத்தொடர்ந்து, கார்த்திகேயன் ஆர்.எஸ்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(34) என்பவரை கைது செய்து, சிறை யில் அடைத்தனர்.
பட்டியலின மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
திருப்பூர், ஏப்.28- தாராபுரம் அருகே பட்டியலின மாணவி களை தினந்தோறும் பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமையாசியர் உட் பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள் ளனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக் குட்பட்ட குமாரபாளையத்தில் அரசு நடுநி லைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கருங் காலி வலசு கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் 2 பேர் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, பள்ளி தலை மையாசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசி ரியை சித்ரா ஆகியோர் பள்ளி கழிவறையை அந்த மாணவிகள் மூலம் சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக சிறுமிகள் பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதுதொ டர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் திருப் பூர் மாவட்டத் தலைவர் கல்கிராஜ், மாவட்டச் செயலாளர் பிரவீன்குமார் ஆகியோர் மூல னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். அதில் மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளதாக சமூக வலைதளங்க ளிலும், தினசரி நாளிதழ்களில் வந்த செய்திய றிந்து, எங்கள் அமைப்பின் சார்பில் கள ஆய்வு செய்தோம். அந்த ஆய்வில் இந்த சம்ப வம் உண்மை என்று தெரியவந்துள்ளது. பள் ளியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியா ளர் மூன்று மாத காலமாக கழிவறை சுத்தம் செய்ய வருவதில்லை. எனவே, பள்ளி தலை மையாசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் வகுப்பு ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவ ரும், பட்டியலின மாணவிகளை தினந்தோ றும் பள்ளிக்கு வந்தவுடன் கழிவுறையை சுத்தம் செய்தால்தான் வகுப்பறைக்குள் அனு மதிப்பேன் என மிரட்டி தினந்தோறும் கழி வறையை சுத்தம் செய்ய வைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக சம்பந்தபட்ட நபர்கள் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜின் கவனத்துக்கு சென் றது. உடனடியாக தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் கோவிந்த சாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோரை, சம்பந்தப்பட்ட குமாரபா ளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரிக்குமாறு உத்தரவிட்டார். இதைய டுத்து நடைபெற்ற விசாரணையில் மாணவி கள் இருவரையும் பள்ளி ஆசிரியைகள் கடந்த ஒரு மாதமாக பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியைகள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரி வித்தார்.
உதகை வாக்குப்பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: ஆட்சியர் அருணா விளக்கம்
உதகை, ஏப்.28- உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி காட்சிகள் செயலிழந்து இருந்தாலும் பாதுகாப்பில் எந்த குறைபாடும் ஏற்படவில்லை என மாவட்ட தேர்தல் அதிகாரி யும், ஆட்சியருமான மு.அருணா விளக்கம ளித்துள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக் கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் நடைபெற் றது. இதில் நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவை தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப் பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட இந்த அறைகளுக்கு மூன்ற டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீ சார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் உள்ளூர் காவல் துறையினர் உள்பட 200 -க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப் புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 173 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. அரசியல் கட்சியினர் மற்றொரு அறை யில் இருந்து அங்குள்ள திரையின் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கண்கா ணித்து வருகின்றனர். இந்நிலையில், சனிக் கிழமை மாலை இந்த திரைகளில் எதுவும் தெரி யாமல் சிக்னல் குறைபாடு எனக் காட்டியுள் ளது. இது 20 நிமிடங்கள் வரை நீடித்தது. இதனால் அங்கிருந்த அரசியல் கட்சியினரி டையே சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி யும், ஆட்சியருமான மு.அருணா கூறுகை யில், உதகையில் வாக்குப்பதிவு இயந்திரங் கள் வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள 173 கண்காணிப்பு கேமராக்களும் சனிக்கிழமை மாலை 6.17 முதல் 6.43 வரை 26 நிமிடங்கள் செயல்படவில்லை. வெயில் காரணமாக சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு செயலிழந்துள்ளது. உடனடியாக தொழில்நுட்ப பணியா ளர்கள் மூலம் கோளாறு சரி செய்யப்பட்டது. கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து இருந்தாலும் பாதுகாப்பில் எந்த குறைபா டும் ஏற்படவில்லை. எந்த விதிமீறலும் நடை பெற வாய்ப்பு இல்லை என்றார்.