ஈரோடு, ஏப்.26- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, ஈரோடு மின்பகிர்மான வட்டக்கிளை சார்பில் தமிழ்நாடு மின்வாரிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு ஆண்டு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, செயலாளர் பி.ஸ்ரீதேவி தலைமை தாங்கினார். எஸ்.பழனியம்மாள் வரவேற்றார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், ஈரோடு மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் சரோஜா, அனைத்திந்திய மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்.கோமதி ஆகியோர் உரையாற்றினர். மின்வாரிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில துணை அமைப்பாளர் இ.விஜயலட்சுமி சிறப்புரையாற்றினார் . பேரவையில் ஈரோடு கிளையின் அமைப்பாளராக பி.ஸ்ரீ தேவி தேர்வு செய்யப்பட்டார். அரச்சலூர் கோமதி நன்றி கூறினார்.