districts

img

ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திருப்பூரில் மின்வாரிய ஊழியர்கள் தர்ணா

திருப்பூர், அக். 20 - மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 1998 ஆம்  ஆண்டு முதல் இன்று வரை பணிபுரி யும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சிஐடியு மின்வாரிய  ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார் பில் வெள்ளியன்று திருப்பூர் மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற் றது.  மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 1998 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பணிபுரியும் ஒப் பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். காலியாக உள்ள கள உத வியாளர் பணியிடங்களில் ஒப்பந்த ஊழி யர்களைத் தினக்கூலி அடிப்படையில் நியமித்து நிரந்தரம் செய்ய வேண்டு. பல  ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்வோம் என்று அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கே2 ஒப்பந்த நடைமுறையை ரத்து செய்து, சிட் ஒப் பந்த முறையை நடைமுறை படுத்த வேண்டும். இ - டெண்டர் முறையை ரத்து  செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தர்ணா போராட் டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்ட தலைவர் சி. மூர்த்தி, மாவட்டச்செயலாளர் கே.ரங்க ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். நாகராஜன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்துப் பேசினர். சிஐடியு மின்வாரிய  ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க திருப்பூர்  வட்டப் பொருளாளர் கே.மோகன்தாஸ், பல்லடம் வட்டச் செயலாளர் பி.ராமலிங் கம், பொருளாளர் என்.சுந்தரம், எ.சக்தி வேல், எஸ்.சுரேஷ், பி.முருகன், எம்.கே.  சரவணன், எம்.வீரன், பி.மணி, என்.பழ னிசாமி உட்பட திரளான ஒப்பந்த ஊழி யர்கள் பங்கேற்றனர். முடிவில் அவி நாசி கோட்டச்செயலாளர் ஜெ.ஐஸ்டிந் திரவியம் நன்றி கூறினார்.