கோவை, ஜூன் 13- கோவையில் நாய், பூனைகளுக்கு எரியூட்ட மின் மயானம் செவ்வாயன்று திறக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையம் பகுதியில் கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி, ரோட்டரி கிளப் சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் நாய், பூனைகளுக்கான மின் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தங்களது வீட்டில் வளர்க்கும் நாய், பூனைகளை இங்கு தகனம் செய்து கொள்ளும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது. சாலையில் உயிரிழக்கும் தெரு நாய்களை இலவசமாக தகனம் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு ஆறு நாய்கள் எரியூடப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின் மயானத்தில் எல்பிஜி கேஸ் மூலமாக இறந்த விலங்கு களின் முழு கழிவுகளும் முற்றிலும் எரிக்கப்படுகிறது. அதன் மாசு வெளியே போகாமலும், பொதுமக்களுக்கு எந்தவித சுகாதார சீர்கேடுகளும் இல்லாமல் புகை வெளியேறும் வகை யில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டு நாய்கள், பூனைகளை இங்கு எரியூட்ட எவ்வளவு செலவாகும் என்பது குறித்து பரிசீலனை செய்து வரு கிறோம். எல்.பி.ஜி கேஸ் செலவு பிற செலவுகளை கணக்கிட்டு அதற்கான கட்டணத் தொகை அறிவிக்கபடும். மேலும் மாநகரில் சாலையோரங்களில் உயிரிழக்கும் நாய், பூனைகளை யார் வேண்டுமானாலும் இங்கு கொண்டு வரலாம். மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக நாய்கள் கணக்கெடுக்கும் பணியில் தோராயமாக ஒரு லட்சத்திற்கும் மேல் தெருநாய்கள் உள்ளன. கோவை புறநகர் பகுதியிலும் மின்மயானம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும், இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.