உடுமலை, ஏப்.2- உடுமலை அருகில் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற் படுத்தும் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா? என வனத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். தருமபுரி மற்றும் கோவை வனப்பகுதி எல்லை பகுதியில் சமீபத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானைகள் மரண மடைந்தன. இதைத்தொடர்ந்து திருப்பூர் வனக்கோட்ட எல்லைப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களிலும் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மின் இணைப்புகள் மற்றும் தாழ்வாக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதா? என மின் வாரிய பணியா ளர்கள், வனப்பணியாளர்கள் இணைந்து ஆய்வில் ஈடு பட்டனர். இதில், உடுமலைப்பேட்டை வனச்சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள ஜல்லிபட்டி, கொங்குரார் குட்டை பகுதிகளில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் கணேஷ்ராம், உடுமலைப்பேட்டை வனச்சரகர் சிவக்குமார் மற்றும் வனத்துறை குழுவினர் வனப்பகுதியின் அருகில் உள்ள இடங்களில் மின் இணைப்புகள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதா? என்றும், சோலார் மின் வேலிகளில் திருட்டுத்தனமாக மின்சாரம் பாய்ச்சப் படுகிறதா? என ஆய்வு செய்தனர். குறிப்பாக, வன எல்லைப்பகுதிகளில் தாழ்வான மின் கம்பங்கள் மூலம் இணைப்புகள் அமைக்கப்பட்டிருந்தாலோ, சட்டத்திற்கு புறம்பாக மின்சாரத்தை பயன்படுத்தி மின்வேலி அமைக்கப்பட்டிருப்பது குறித்து தெரிவிக்க, உடுமலைப் பேட்டை வனச்சரகம்: 9487987173, 7502289850, 9486659701, 9487787731. அமராவதி வனச்சரகம்: 9047066460, 9486587797. கொழுமம் வனச்சரகம்: 8072981528, 8778725381 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.