கோபி, மார்ச் 31- கோபியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழு ஆலோச னைக் கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு தாலுகா கமிட்டி உறுப்பினர் கே.சி.ரங்கசாமி தலைமை வகித்தார். இதில், கோபி நகரம், பேரூர், கிராமங்கள் வாரியாக கூட்டணி கட்சிகளோடு இணைந்து வாக்கு சேகரிக்க செல்வது. பாஜக அரசின் மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்களுக்கு எதிராக மோடி அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மக்களிடத்தில் எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பது. கோபி சட்டமன்ற தொகுதி முழுவதும் தீவிர வாகன பிரச்சாரம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப் பட்டது. இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.முனுசாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துசாமி, கிருஷ்ண வேணி, தாலுகா செயலாளர் ஜி.ஏ.துரை சாமி உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.