சேலம், பிப்.11- நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், சேலத்தில் பலதரப்பு மக் களை நேரில் சந்தித்து, பரிந்துரைகளை பெற்றனர். 2024 நாடாளுமன்ற தேர்தலை முன் னிட்டு, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற் காக திமுக துணைப் பொதுச்செயலா ளர் கனிமொழி எம்.பி., தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட் டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை தயா ரிக்கும் குழு, பிப்.5 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உரிமை களை மீட்க “ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் நாடாளுமன்றத்தில் ஒலித் திட வேண்டிய தமிழ்நாட்டின் கோரிக் கைகள் குறித்து பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்துக்களை கேட்டு வரு கிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் ஞாயிறன்று தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய பொதுமக்களின் கோரிக்கைகளை இக்குழுவினர் பெற்ற னர். இதில் சேலம், நாமக்கல், கள்ளக் குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த வணி கர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற் சங்க பிரதிநிதிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சிறு குறு நிறுவனங்க ளின் உரிமையாளர்கள், பெண்கள் நல அமைப்பு நிர்வாகிகள், தொழிலாளர் கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் தங்கள் கோரிக்கைகளை அளித்தனர்.
கல்விக்கடனை ரத்து செய்யக்கோரி மனு
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் மாணவ, மாணவிகள் கல்வி கற்பதற்காக வங்கிகளில் கல்விக்கடன் பெற்று படிப்பினை முடித் தும், அவர்களுக்கு சரியான வேலை வாய்ப்பு இல்லாததால், கடனை கட்டு வதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குமாரபாளையத்தில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கியில் கடன் பெற்றவர்களின் வீட்டிற்கு வங்கியின் பணியாளர்கள் மிரட்டல் விடுவது, தகாத வார்த்தைகளால் பேசுவது போன்ற செயல்களை செய்து வருகின்ற னர். மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு குமாரபாளையம் அனைத்து பொதுநல அமைப்பு சார்பில், கல்விக்கடனை ரத்து செய்யக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மனு வழங்கல் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சேலத்திற்கு திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவிடம், கல்விக்கடன் பெற்ற குமாரபாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகம் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் என்பதை சேர்க்க வலியுறுத்தி மனு வழங்கினர்.