districts

img

அரசியல் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்

கோவை, ஜன.11- தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண் ணத்திற்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத் திற்கு எதிராகவும், அரசியல் சட்டத்திற்கு  எதிராகவும் தமிழக ஆளுநர் செயல்படுவ தாக கல்வியாளர் பு.ப.பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றஞ்சாட்டியுள்ளார். கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை  பெரியார் படிப்பகத்தில் பொதுப் பள்ளிக் கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு  செவ் வாயன்று செய்தியாளர்களிடம் கூறுகை யில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி  ஜன.30 ஆம் தேதியன்று ஒருநாள் அடை யாள உண்ணாவிரத போராட்டமும், ஆளு நர் தொடர்ந்து செவிசாய்க்கவில்லை என் றால் தொடர் உண்ணாவிரத போராட்டத் தில் தான்  ஈடுபட உள்ளேன். நீட் தேர்வு ரத்து குறித்து அனைத்து தரப் பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற னர். தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் தேர்வு ரத்து  தொடர்பாக வாக்குறுதிகளை அளித்தனர். இதனைத்தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்ததும் ஓய்வு பெற்ற நீதியர சர் ராஜன் தலைமையில் நீட் தொடர்பாக  வல்லுநர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து, சட்ட முன்வடிவு வழங்கியது. இந்த சட்ட  முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் குடியரசு தலைவருக்கு இதுவரை  அனுப்பாமல், மூன்று மாதங்க ளாக இழுத்தடித்து வருகிறார்.  தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர் கள் பல்வேறு துன்பத்திலும் மன உளைச்சலி லும் உள்ளனர். ஆனால் அதை கண்டுகொள் ளாமல், கூட்டாட்சி தத்துவம் மற்றும் அரசிய லமைப்பு சட்டத்தை மீறி ஆளுநர் செயல்படு கிறார். உடனடியாக ஆளுநர் நீட் தொடர் பாக சட்ட வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக இந் திய அரசு குடியரசு தலைவரிடம் ஒப்புதலை  பெற்று தரவேண்டும். நீட் தேர்வு மற்றும் நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த  உள்ளோம். இதன் மூலமாக  ஒவ்வொரு வீட்டிற்கும் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பை எடுத்துச் சொல்வோம். இதனைத்தொ டர்ந்து  ஜன.30 ஆம் தேதியன்று காந்தி  நினைவு நாளில் சென்னையில் உண்ணாவிர தம் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், என் றார். முன்னதாக, கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த துண்டு பிர சுரங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர். இதில், தந்தை பெரியார் திராவி டர் கழகத்தின் பொதுச்செயலாளர்  கு.ராம கிருட்டிணன், திராவிட தமிழர் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் வெண்மணி, விடு தலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செய லாளர் சுசி.கலையரசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ். கனகராஜ், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா, மாணவர் நல  பெற்றோர் அமைப்பின் நிர்வாகி வி.தெய் வேந்திரன், சுப்பிரமணியம், கே.பாண்டியன் மற்றும் நேரு தாஸ், மலரவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.