கோவை, பிப்.15- கோவை மாவட்டத்தில் இது வரை மூவாயிரம் மாணவர்களுக்கு ரூ.200 கோடி கல்விக்கடன் வழங் கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து விடுபட்டவர்களுக்கும் கல்விக்க டன் வழங்கப்பட இருக்கிறது என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பெருமிதம் தெரிவித் தார். கோவை, ஈச்சனாரி, கற்பகம் உயர்கல்வி அகாடமி வளாகத்தில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வியாழன்று மாபெரும் முகாம் நடைபெற்றது. ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற இம்மு காமில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப் பினர் கு.சண்முகசுந்தரம் ஆகி யோர் பங்கேற்றனர். முன்னதாக ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பேசுகையில், கோவை மாவட்டத்தில் அரசின் திட்டங்களை பொதுமக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் மக்கள் பிர திநிதிகள் இணைந்து சிறப்பாக செயல்படுகின்றனர். கல்லூரி கல்வி முழுமையாக வழங்கினால் தான் நாடு அதிகமான வளர்ச்சியை காணமுடியும். அனைத்து மாணக் கர்களும் உயர்கல்வி பயிலவேண் டும் என்ற நோக்கத்தில் தமிழ் நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளார். குறிப்பாக நான் முதல்வன் திட் டத்தின் கீழ் எந்த மாணக்கர்கள் என்ன உயர்கல்வி படிப்பை படிக்க வேண்டும் என்பது குறித்து வழி காட்டுதல்கள் வழங்கப்படு கின்றது. உயர்கல்வி பயில்வதற்கு பொருளாதார பிரச்சனை அவர் களுக்கு மிகப்பெரிய தடையாக இருக்கின்றது. இந்த நிலை இருக்க கூடாது என்பதற்காகத் தான் கல்வி கடன் வழங்கும் முகாம்கள் நடத் த்தப்பட்டு வருகின்றன. கல்விக்கடன்களை பெறுவ தற்கு மாணக்கர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. கல்வி கடன் பெறுவதற்கான சான்றிதழ் களை, பல்வேறு அரசு துறை களிடமிருந்து பெறவேண்டி இருக்கிறது. இது அவர்களுக்கு சிரமமானதாக இருந்தது. இது தொடர்பாக கல்லூரிகளுக்கே நேர டியாக சென்று, அந்தமாதிரியான சான்றிதழ்கள் தேவைப்படும் மாண வர்களுக்கு, அதற்கு எந்ததுறை யில் எவ்வாறு விண்ணப்பம் அளிப் பது என்பது குறித்து விளக்கமளிக் கப்பட்டது. அதுதொடர்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, உரிய சான்றிதழ்களுடன் கல்விக்கடன் வழங்கும் முகாமில் கலந்து கொண்ட மாணக்கர்களுக்கு கல்வி கடன் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்கள் 6 கல்வி கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 7 ஆவது கல்விக்கடன் வழங்கும் முகாம் இங்கு நடைபெறுகிறது.
3000க்கு மேற்பட்ட பதிவு செய்த மாணக்கர்களுக்கு ரூ.100 கோடி மதிப்பில் கல்விக்கடன் வழங்கப் பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.200 கோடி மதிப்பில் கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. விடுபட்ட மாணக்கர்களுக்கு கல்விக்கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்றார். முன்னதாக, இம்முகாமில் 5000 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகளையும், கல்விக் கடன் வழங்கும் முகாமில் 10 மாண வர்களுக்கு ரூ.30.74 இலட்சம் மதிப்பிலான கல்விக்கடன் பெறு வதற்கான ஆணைகளை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், பொள்ளாச்சி நாடாளு மன்ற உறுப்பினர் கு.சண்முகசுந் தரம் ஆகியோர் வழங்கினர். இம்முகாமில் கற்பகம் பல் கலைக்கழகத்தின் துணைவேந்தர் வெங்கடாஜலபதி, மூத்தஆலோச கர் (கல்விக்கடன்) ஜெ.வணங்கா முடி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜீதேந்திரன், மதுக்கரை ஒன்றியக் குழு உறுப்பினர் மாசிலா மணி, ஒத்தக்கால் மண்டபம் பேரூ ராட்சித் தலைவர் பிரியதர்ஷினி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு கல்விக்க டன் கிடைக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் தொடர்ந்து வலியுறுத்தியும், அதற்கான பல் வேறு முயற்சிகளை எடுத்து வந் தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.