சேலம், ஜூன் 11- சேலத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி யில் ஈக்கள் தொல்லையால் தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவ சர அவசரமாக மண்டபத்தை விட்டு வெளியாறினார். சேலம் மாவட்ட அதிமுக பொருளாளர் வெங்கடாச்ச லம் இல்ல திருமண வர வேற்பு விழா, சேலம் – நாமக் கல் சாலையில், ராசிபுரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளி யன்று இரவு நடைபெற்றது. அங்கு வந்திருந்த உறவினர்கள், மண்டபத்திலி ருந்த ஈக்களின் தொல்லையால் கடும் அவதி யடைந்தனர். குறிப்பாக, உணவு அருந்தும் இடங்களில் கூட்டம் கூட்டமாக ஈக்கள் படை யெடுத்தது. இதனால், மண்டபத்தில் அமர வும் முடியாமல் உறவினர்கள் திணறினர். இதற்கிடையே இந்த திருமண விழாவிற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி வந்திருந்தார். ஈக்கள் தொல்லையை அறிந்த எடப்பாடி பழனிச் சாமி மணமக்களை வாழ்த்திவிட்டு, அவர் அவசர அவசரமாக மண்டபத்தை விட்டு வெளியேறினார். இவரைப்போலவே அதி முக முன்னாள் அமைச்சர்கள் சரோஜா, விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் ஈக்கள் தொல்லையால் விரைவாக மண்டபத்திலி ருந்து வெளியேறினர். ஒரு பெரிய திருமண மண்டபத்தில் இப் படி ஈக்கள் கூட்டம் கூட்டமாக இருந்ததும், இதனால், திருமணத்திற்கு வந்தவர்கள் அவ திக்குள்ளாகினதும், திருமண வீட்டாருக்கு கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த திருமண மண்டபத்தை சுற்றி அதிகள வில் கோழிப்பண்ணைகள் இருப்பதால், இதுபோன்று ஈக்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரி வித்தனர்.