திருப்பூர், ஜூலை 18 - வேலம்பாளையம் நகரப் பகுதி யில் சாலைகளை செப்பனிட வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்ட அறிவிப்பு செய்திருந்தது. இந்நிலையில் மேயர் தினேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை பணி கள் தொடங்கப்பட்டதால் போராட் டம் ஒத்திவைக்கப்பட்டது. வேலம்பாளையம் நகரப் பகுதி யில், அனுப்பர்பாளையம் முதல் சோளிபாளையம் வரையும், வேலம் பாளையம் முதல் தண்ணீர்ப்பந்தல் வரையும் மற்றும் வார்டுகளில் உள்ள பல சாலைகள் முழுவதும் தோண்டிப் போடப்பட்டு, பல மாதங்களாக குண் டும் குழியுமாகக் கிடக்கிறது. இதில் பயணம் செய்த 24 வயதே யான இளைஞர் ஒருவர் சறுக்கி விழுந்து, வாகனத்தில் சிக்கி உயிரி ழந்துள்ளார். ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள், இளைஞர் கள் பலரும் இந்தச் சாலைகளில் பய ணிக்கும்போது, சறுக்கியும், குழிக ளில் விழுந்தும் கை, கால்கள் முறிந்து மருத்துவமனைகளில் பல லட்சம் செலவழித்தும் இயல்பு வாழ்க் கைக்கு திரும்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேற்கண்ட குண்டும் குழியுமான அனுப்பர்பாளையம் முதல் சோளி பாளையம் வரையிலான சாலையை உடனடியாகத் தரமான தார்ச்சாலை யாக அமைத்திட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் வருகிற புதனன்று, தண்டோரா போட்டு நடைபயணப் போராட்டம் நடத்துவதாக அறிவிக் கப்பட்டது. இந்தப் பின்னணியில், திங்க ளன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்த மாநகராட்சி மேயர் ந.தினேஷ்கு மார், இந்த சாலை பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டு ரூ.87 லட்சத்தில் பணிகள் தொடங்கவுள்ளது.
எனவே, போராட்டத்தை கைவிட வேண்டு மென்று கேட்டுக் கொண்டார். இப்பேச்சுவார்த்தையில், மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், வேலம்பா ளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோ பால், நகரக்குழு உறுப்பினர்கள் ஆர். சுகுமார், பி.நவபாலன், பி.சின்னச் சாமி, பி.ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். மேயரிடம், ஏற்கனவே உள்ள சாலைகளில் பராமரிப்பு, மறு சீர மைப்பு, புதிய சாலை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது, பணியின் பெயர், ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை, காலக்கெடு, ஒப்பந்ததாரர் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பலகைகள் வைக்கப்பட வேண்டும், பராமரிப்பு செய்யப்படும் சாலையில் வரும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக உரிய தடுப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேன் டும், தோண்டும் பணி முடிந்ததும், மீண்டும் சாலையை சமன்படுத்தி சரி செய்திட வேண்டும், காலையிலும், மாலையிலும் வேலைக்குச் செல் வோர், மாணவர்கள், பொதுமக்க ளுக்கு இடையூறு இல்லாத வகையி லும், போக்குவரத்து நெருக்கடி ஏற்ப டுத்தாத வகையி்லும் பணிகள் மேற் கொள்ளப்பட வேண்டும், சாலைப் பணிகள் தரமாக செய்யப்பட வேண் டும் என கேட்டுக் கொண்டனர். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிக ளுக்கும் தெரிவித்து, குறுகிய காலத் திற்குள் சாலையமைத்திட மேயர் உறுதி கூறினார். சாலையமைக்கும் பணி தொடங் கிய நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, வரும் 20ஆம் தேதி அன்று நடத்துவதாக அறிவித்த தண் டோரா போட்டு நடைபயணப் போராட்டம், தற்காலிகமாக ஒத்தி வைக்கப் படுவதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.