பவானி நகராட்சியில், 30 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியாளராக ஈ.வேலு என்பவர் பணியாற்றி வந்தார். உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் பவானி கிளை தலைவராக செயல்பட்ட இவரது பணி நிறைவு பாராட்டு விழா நகரமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், நகர மன்ற தலைவர் சிந்தூரி, பொறியாளர் கதிர்வேல், தூய்மை ஆய்வாளர் செந்தில் குமார், மற்றும் பவானி தாலுகா சிஐடிதயு பொது தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஏ.ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று, ஈ.வேலுவை கௌரவித்து வழியனுப்பினர்.