districts

img

இ.டெண்டர் முறையை ரத்து செய்திடுக: மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக.30- பணியாட்களுக்கான இ.டெண்டர் முறையை ரத்து  செய்ய வேண்டும் என வலி யுறுத்தி சிஐடியு தமிழ் நாடு மின்ஊழியர் மத்திய  அமைப்பினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஊதிய உயர்வு நிலுவைத் தொகைகளை உடனடியாக  வழங்க வேணடும். பல மாதங்களாக வழங்காமல் உள்ள இரட்டிப்பு ஊதியம்,  பயணப் படி, பொது வருங்கால வைப்பு நிதி முன் பணக்கடன் ஆகியவைகளை  உடனடியாக வழங்க வேண்டும். காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும். பணியாட் களுக்கான இ.டெண்டர் முறையை ரத்து  செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்கனவே  உள்ள மின் இணைப்புகளுக்கு டோட்டெக்ஸ்   முறையில் ஸ்மார்ட் மீட்டர்  வைக்கும்  திட்டத்திற்கு டெண்டர் அறிவிக்க உள்ளதை  கைவிட வேண்டும். 2019 டிச.1 ஆம் தேதிக்கு  பின்பும், 2023 மே 16  ஆம் தேதிக்கு முன்பும்  கேங்மேன் மற்றும் வாரிசு பணியில் சேர்ந்த வர்களுக்கு 6 சதவிகிதம்  ஊதிய உயர்வு  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் தீ.லெனின் மகேந்திரன் தலைமை  வகித்தார், மாநில துணைத்தலைவர் பி.ஜீவா,  திட்ட துணைத்தலைவர் வி.வெண்ணிலா, ஆறுமுகம், குமரவேல், சிவக்குமார், ஆறு முகம் திம்மராயன் ஆகியோர் கண்டன உரை யாற்றினார். ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஜி.பி.விஜயன் வாழ்த்தி பேசினார். முடிவில், கோட்டச் செய லாளர் ஜெகநாதன் நன்றி கூறினார். இதில்  ஏராளமான மின்ஊழியர்கள் கலந்து கொண்டனர்.