திருப்பூர், ஜூலை 23 - தமிழ்நாடு மின்வாரியத்தில் காலி யாக உள்ள 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்புமாறு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருப்பூர் மின் வட்டக்கிளை நான்காவது மாநாடு வலி யுறுத்தி உள்ளது. திருப்பூர் எஸ்.பஞ்சரத்தினம் நினை வரங்கில் சனியன்று மாநிலத் துணைத் தலைவர் து.கோபாலகிருஷ்ணன் தலைமையில் இம்மாநாடு நடைபெற் றது. முன்னதாக பிஎஸ்என்எல் ஓய்வு பெற்றோர் அமைப்பின் சார்பில் விஸ்வ நாதன் கொடியேற்றினார். சிஐடியு திருப் பூர் மாவட்டத் துணைத் தலைவர் சி. மூர்த்தி தொடக்க உரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் கே.உண்ணிகி ருஷ்ணன், பல்லடம் கிளைச் செயலா ளர் பி.ராமலிங்கம் வாழ்த்திப் பேசினர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே. அருட்செல்வன் சிறப்புரை ஆற்றினார். இம்மாநாட்டில் மின் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண் டும், உத்தரவு எண் 2ஐ ரத்து செய்ய வேண்டும், ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன. இம்மாநாட்டில் கிளைத் தலைவராக பி.பாபு, செயலா ளராக ஆர்.நாகராஜன், பொரு ளாளராக கே.மோகன்தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து வைத்து சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் பேசினார். முடிவில் பி.மார்க்ஸ் நன்றி கூறினார்.