நாமக்கல், அக்.25- நாமக்கல் அருகில் தண்ணீர் தட்டுப் பாடால் சாய ஆலைகளுக்கு நிலத்தடி நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், கலியனூர் பஞ்சாயத்து பகுதி யில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதி பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில், இந்தாண்டு போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் களியனூர் பஞ்சாயத்து பகுதி முழுவதும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பஞ்சாயத்து பகுதியில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளுக்கு நிலத்தடி நீர் லாரிகள் மூலமாக விநியோ கிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது மக்கள் பயன்பாட்டிற்கான தண்ணீர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளதால், கலியனூர் பஞ்சா யத்து நிர்வாகம் சாய ஆலைகளுக்கு நிலத் தடி நீரை எடுக்க தடை விதித்துள்ளது. மேலும் இதுகுறித்த அறிவிப்பு கலியனூர் பஞ்சா யத்தின் பல்வேறு இடங்களில் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளது. தடைகளை மீறி சாய ஆலைகளுக்கு நிலத்தடி நீர் கொண்டு செல் லப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.