districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நீர்மட்டம் குறைந்ததால்  வலையில் அதிகம் சிக்கும் மீன்கள்

உடுமலை, மார்ச் 13- அமராவதி அணை நீர்மட்டம் குறைந்ததால், அதிகளவில்  மீன்கள் கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில், தமிழ் நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில், ஒப்பந்த அடிப்படை யில் மீன் பிடிக்கும் பணியை மீனவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இதில், 17 பரிசல்களில் தலா இருவர் வீதம்  அணையில் தினசரி காலை, மாலை நேரங்களில் வலை விரித்து மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் பிடித்துவரும் மீன்களுக்கு கிலோவுக்கு குறிப்பிட்ட தொகை மீன் வளர்ச்சி  கழகம் சார்பில் வழங்கப்படுகிறது. வழக்கமாக அணையில்  நீர்மட்டம் முழு கொள்ளளவில் இருக்கும்போது, மீன்கள் அதிகமாக வலையில் சிக்குவதில்லை. அணையின் அடிப் பாகத்துக்கு சென்றுவிடும். தற்போது அமராவதி அணை நீர்மட்டம் குறைந்து வரு கிறது.  மொத்தமுள்ள 90 அடியில் ஞாயிறன்று நீர்மட்டம் 52.43 அடியாக இருந்தது. நீர்மட்டம் கிட்டதட்ட பாதியளவு குறைந்துள்ளதால், மீனவர்கள் விரிக்கும் வலையில் அதிகளவு மீன்கள் சிக்குகின்றன. நீர்மட்டம் முழுமையாக இருக்கும்போது, 100 முதல் 150 கிலோ வரைதான் மீன்  கிடைக்கும். ஆனால் தற்போது 450 கிலோ வரை மீன் கிடைக் கிறது. இதனால் தங்களுக்கு வருமானம் அதிகரித்துள்ள தாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாலையை விரைந்து சீரமைக்க கோரிக்கை

தருமபுரி, மார்ச் 13- சேதமடைந்து காணப்படும் தொப்பூர் – பொம்மிடி சாலை யை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது. தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே உள்ள தொப்பை யாறு அணை 50 அடி உயரம் கொண்டது. தொப்பூரிலிருந்து பொம்மிடி பகுதிக்கு தொப்பையாறு அணையை ஒட்டி தார்ச்சாலை செல்கிறது. இந்த சாலையில் பேருந்துகள் கனரக  வாகனங்கள் பள்ளி கல்லூரி வாகனங்கள் மற்றும் இருசக்கர  வாகனங்கள் தினமும் அதிகளவில் பயணிக்கும் அளவிற்கு  பிரதான சாலையாக இருந்து வருகிறது. இந்நிலையில், தொப்பையாறு அணைக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து இருந்த தாலும், அணை முழு கொள்ளளவை எட்டியதாலும் அணை யின் தண்ணீர் சாலையின் இருபுறமும் தேங்கி நின்றது.  இதனால் அணையை ஒட்டி உள்ள சாலையின் பக்கவாட்டு சுவர்கள் மண் அரிப்பு ஏற்பட்டு தொப்பூர் - பொம்மிடி சாலை யின் ஒரு பகுதி உடைந்து சரிந்து தண்ணீரில் மூழ்கியது.  சாலையின் மற்ற பகுதிகள் எந்த நேரத்திலும் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டதால், அப்பகுதியில் போக்கு வரத்து என அனைத்தும் முழுமையாக தடை செய்யப் பட்டது. இந்நிலையில், இப்பகுதியில் முக்கியமான சாலையாக இச்சாலை இருப்பதால், கடந்த இரண்டு மாதங் களாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பள்ளி,  கல்லூரி செல்லும் மாணவர்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து  சென்று மறுபக்கத்தில் உள்ள பேருந்துக்கு தினமும் மாறி மாறி  செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மற்ற ஊர் களுக்கு செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமத்துக் குள்ளாகியுள்ளனர். மாற்று சாலைக்கான ஏற்பாடுகள் ஏதும்  செய்யாமல் பிரதான சாலையும் அணையின் தண்ணீர் வற்றிய  பிறகும் சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும், மாணவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். எனவே, இப்பிரச்சனை குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பட்டதாரி இளைஞர் தற்கொலை

கோவை, மார்ச் 13- வேலை கிடைக்காத விரக்தியில் பட்ட தாரி இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது.  கோவை மத்திய சிறை அருகே சிறைச் சாலை மைதானம் உள்ளது. இங்குள்ள ஒரு  மரத்தில் திங்களன்று காலை வாலிபர் ஒருவர்  தூக்கில் சடலமாக தொங்குவதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில்  பந்தய சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.  போலீசார் நடத்திய முதற்கட்ட விசார ணையில், 25 வயது மதிக்கத்தக்க அந்த  வாலிபர் பெங்களூரு மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்தவர் என்பதும், பட்டதாரி யான இவர் வேலை தேடி கோவை வந்துள் ளார். இந்நிலையில், வேலை கிடைக்காத  விரக்தியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பந்தய சாலை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்

திருப்பூர், மார்ச் 13 -  திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 அரசுப் பொதுத்தேர்வு திங்களன்று துவங்கியது. இம்மாவட்டத்தில் 26 ஆயிரத்து 160  மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையால் நடத்தப்படும் மார்ச்  2023-க்கான பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் திங்களன்று மாநிலம்  முழுவதும் தொடங்கியது. வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை  இத்தேர்வுகள் நடக்கிறது. இத்தேர்வினை 93 தேர்வு மையங்க ளில், 213 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 25 ஆயிரத்து 664  மாணவ, மாணவிகள், 496 தனித்தேர்வர்கள் என மொத்தம் 26  ஆயிரத்து 160 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்க ளில் பணியாற்ற முதன்மை 1,608 ஆசிரியர்கள் அறை கண்கா ணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுகளில் முறைகேடுகள் செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீனச்  செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், கல்வி அலுவலர்கள் தலைமையிலும்; தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக் கப்பட்டுள்ளது.  இந்நிலையில் முதல் நாளான திங்களன்று திருப்பூர் ஜெய் வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர்  எஸ்.வினீத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெள்ளகோவிலில் புதிய மதுக்கடைக்கு எதிர்ப்பு

திருப்பூர், மார்ச் 13- வெள்ளகோவிலில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் குளிர் சாதன மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு  அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் புதிய பேருந்து  நிலையம் அருகே அரசு மதுபானக்கடை செயல்பட்டு வந்தது.  கடந்த 15 மாதங்களுக்கு முன்பு பொதுமக்களின் போராட் டத்தை அடுத்து அங்கிருந்த கடை அகற்றப்பட்டது. இந்நிலை யில் தற்போது அதே பகுதியில் நவீன குளிர் சாதன வசதியுடன்  மதுக்கடை திறக்க பணிகள் நடைபெற்று வருவதாக தெரி கிறது. இந்நிலையில் மதுபானக்கடை அமையும் இடத்தின் அருகே அரசு துவக்கப்பள்ளி, பேருந்து நிலையம், டிஆர் நகர்  குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக உள்ளதால், அந்த இடத் தில் மதுபானக்கடை அமைக்க கூடாது என வெள்ளகோ வில் நகராட்சி 5 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் செல்வராஜ்  தலைமையில் 50‌க்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பொது சுகாதார மருந்து கிடங்கு திறப்பு

திருப்பூர், மார்ச் 13 – திருப்பூர் மாநகராட்சி மற்றும் திருப்பூர் வடக்கு ரோட்டரி  சங்கம் இணைந்து நமக்கு நாமே திட்டதின கீழ் ரூ.27 லட்சம்  மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பொது சுகாதார மருந்து  கிடங்கு கட்டிடத்தினை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் க.செல்வராஜ் திறந்து வைத்து கந்தசாமி செட்டியார் மருத் துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இந்நிகழ்வில் திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார், மாநக ராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர், 2-ஆம் மண்ட லத்தலைவர் தம்பி கோவிந்தராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், கவிதா கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், மூன்றாவது மண்டலம் வார்டு எண்  47-இல், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பாளையம் ஏ.டி காலனி  மற்றும் சென்னிமலைபாளையம் ஏ.டி காலனியில் புதியதாக  கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை சட்டமன்ற உறுப்பினர்  க.செல்வராஜ் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார், மாமன்ற  உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், ஜெயசுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தாட்கோ சார்பில் இலவச பயிற்சி

திருப்பூர், மார்ச் 13 - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்  கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர், பழங்குடியின மாணாக்கர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணை யம் நடத்தும் பல்வேறு பணிகளுக்கான தேர்வில் பங்கேற்று  தேர்ச்சி பெற இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட  ஆட்சியர் எஸ்.வினீத் கூறியுள்ளார். ஆட்சியர் எஸ்.வினீத் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: பணியாளர் அரசு தேர்வு ஆணை யம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023 ஆம் ஆண்டிற் கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுகள் மூலம் 11ஆயிரம் காலி யான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப் பட உள்ளது. இத்தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலம் இலவச  பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள  பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஏதேனும் ஒரு  பட்டப்படிப்பு படித்து முடித்த மாணாக்கர்கள் விண்ணப்பிக்க லாம். ஆதிதிராவிடர், பழங்குடியின மாணாக்கர்கள் பயிற்சி  பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு  செய்து கொள்ளலாம் இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும்  தாட்கோவால் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் தெரிவித்துள்ளார்.

குடியிருப்பில் நாகப்பாம்பு மீட்பு

திருப்பூர், மார்ச் 13 – திருப்பூர் செவந்தாம்பா ளையம் ஜீவாநகர் பகுதியில்  வீட்டுக்குள் நாகப்பாம்பு புகுந்தததை கண்டு அந்த வீட்டில் குடியிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். இது  குறித்து திருப்பூர் தெற்கு தீய ணைப்பு நிலையத்தா ருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தீயணைப்பு மீட்புப்  படையினர் வந்து நாகப் பாம்பை பிடித்துச் சென்றனர்.  அந்த பாம்பை வனப்பகு திக்குள் விடுவதாகவும் மீட் புப் படையினர் தெரிவித்த னர்.

நவீன வடிவத்தில் வன்கொடுமைகள் அரங்கேற்றப்படுகின்றன: கே.சாமுவேல்ராஜ்

திருப்பூர், மார்ச் 13 – அறிவியல் சமூகத் தகவல்  தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி ஏற் பட்டிருக்கும் நிலையில் நவீன வடி வத்தில் வன்கொடுமைகள் அரங் கேற்றப்படுகின்றன என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்  மாநிலப் பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் கூறினார். திருப்பூர் தியாகி பழனிச்சாமி  நிலையத்தில் திங்களன்று மார்க்சிய,  அம்பேத்காரிய, பெரியாரிய இயக் கங்களின் நிர்வாகிகள் கலந்துரையா டல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்தில் பல்வேறு அமைப்புகளின் நிர் வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கே.சாமுவேல்ராஜ் கூறு கையில், பட்டியல் சாதி, பழங்குடி மற் றும் பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறை நடவடிக்கைகள் முன்பு  வெளிப்படையாகத் தெரியாதபடி ரக சியமாக நடத்தப்படும் சூழல் இருந் தது. ஆனால் தற்போது சமூக ஊடகங் கள் பரவியுள்ள நிலையில், அவர்க ளுக்கு இழைக்கப்படும் வன்கொடு மைகளை ஒளிப்பதிவு செய்து  அவற்றை சமூக ஊடகங்களில் பரப்பு கின்றனர். இது இருவித மன நிலையை ஏற்படுத்தும். ஆதிக்கத் தில் இருப்போருக்கு எதிராக செயல் பட்டால், அவர்கள் மீது கடும் வன் முறை, அடக்குமுறை ஏவப்படும் என்று அச்சுறுத்துவது ஒன்று. அதே  சமயம் இந்த காட்சிகளை சமூக ஊட கங்களில் காணக்கூடிய தாழ்த்தப் பட்ட இதர ஒடுக்கப்பட்ட மக்கள்  காணும்போது, நமக்கு எதற்கு வம்பு  என ஒதுங்கிக் கொள்ளும் நிலை ஏற்ப டுகிறது. சாதிய கட்சிகள், மதவாத கட்சி கள் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இசை வாக செயல்படுகின்றன. தமிழகத் தில் சாதிய அடையாளத்துடன்  செயல்படும் கட்சிகளைச் சேர்ந்தவர் கள் மதவாத பாஜகவில் இணையும் போக்கு உள்ளது. அதேபோல் மத வாத கண்ணோட்டத்துடன் பாஜக வில் இருப்போருக்கும் சாதிய மன நிலை வலுவாக உள்ளது. அவர்கள்  சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில்  இருக்கக்கூடியவர்கள் கேள்வி கேட் காமல் அதே நிலையில் அடங்கி இருக்க வேண்டும் என்று நினைக்கின் றனர். எனவேதான் களப் போராட்டம்  நடத்தி இதில் மாற்றம் காண வேண்டி யிருக்கிறது. அதற்கு முன்பாக  அமைப்புரீதியாக செயல்படக் கூடி யவர்கள் கலந்துரையாடி, கருத்தி யல் ரீதியாக தெளிவான புரிதலுக்கு  வர வேண்டும். அம்பேத்கர் கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்று சொன் னதன் பொருள் இதுதான். மார்க்சிய, அம்பேத்கரிய, பெரி யாரிய இயக்கங்கள் மாற்றத்தின் மீது  நம்பிக்கை கொண்டவை. சமூக மாற் றம் ஏற்படும், சாதிய ஏற்றத்தாழ்வு,  சாதிய கட்டுமானம் அழியும் என்ற  உறுதியான நம்பிக்கை கொண்டவர் கள். அதேசமயம் நாம் கலந்துரையா டுவதன் மூலம் சமூக ஒடுக்குமுறை,  வன்கொடுமைகளுக்கு எதிரான  போராட்டத்தை முன்னெடுக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் பங்கேற்றோர்  சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக மேற் கொள்ள வேண்டிய போராட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து தெரி வித்தனர்.

உடுமலை அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:33.30/60அடி நீர்வரத்து:839கன அடி
வெளியேற்றம்:670கனஅடி
அமராவதி அணை நீர்மட்டம்:52.33/90அடி.நீர்வரத்து:21கனஅடி
வெளியேற்றம்:81கன அடி

இன்று குறை தீர்க் கூட்டம்

திருப்பூர், மார்ச் 13 - திருப்பூர் நெரிப்பரிசலில் உள்ள மாவட்டப் பதிவாளர்  அலுவலகத்தில் செவ்வா யன்று (இன்று) காலை 11.30 மணியளவில் நுகர்வோர்  பாதுகாப்பு அமைப்புகளுக் கான குறைதீர் கூட்டம் நடக்க வுள்ளது.

நாமக்கல்: 77 வழக்குகளுக்கு தீர்வு

நாமக்கல், மார்ச் 13- நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத் தில் 77 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத் தரவின்படி, நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்று முறை தீர்வு மைய கட்டிடத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக்  அதாலத்) நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குண சேகரன் தலைமை ஏற்றார். இதில் மோட்டார் வாகன விபத்து  நஷ்டஈடு வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சமா தானமாகவும், விரைவாகவும் முடித்துக்கொள்ள வழிவகை  செய்யபட்டது. நாமக்கல்லில் நடந்த மக்கள் நீதிமன்ற அமர் வில் நீதிபதி கிருஷ்ணன், முதன்மை சார்பு நீதிபதி விஜய் கார்த் திக் உள்ளிட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர். இதே போல், திருச்செங்கோட்டில் நீதிபதிகள் சுரேஷ், தமிழரசி, ராசி புரம் சார்பு நீதிபதி தீனதயாளன் உள்ளிட்ட நீதிபதிகள் கலந்து  கொண்டனர். இதில் குமாரபாளையம் மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளில் உள்ள வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்தமாக இந்த மக்கள் நீதிமன்றத்தில் சாலை விபத்துக் கள் தொடர்பான 98 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் 77 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட் டன. இவற்றில் ரூ.3 கோடியே 67 லட்சத்து 34 ஆயிரத்து 74  வழங்கப்பட்டது.

சரக்கு ரயில்கள் மூலம் ரூ.282.58 கோடி வருவாய்

கோவை, மார்ச் 13- சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில், சரக்கு ரயில்கள் மூலமாக நடப்பு நிதியாண்டில் ரூ.282.58 கோடி வரு வாய் ஈட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது, சேலம் கோட்டத்துக் குட்பட்ட ரயில்வே சேலம், ஈரோடு, திருப் பூர், கோவை ரயில் நிலையங்களிலிருந்து சரக்கு ரயில்கள் மூலமாக உணவுப் பொருட் கள், கட்டுமானப் பொருட்கள், துணிகள், தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள் ளிட்ட பல்வேறு பொருள்கள் அனுப்பி வைக் கப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவை இருகூரிலிருந்து பெட்ரோலியப் பொருட்கள், சரக்கு ரயில்கள் மூலமாக மைசூர், பெங்க ளூர், ராய்ச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கரூர் அருகே  உள்ள பாளையம் மற்றும் வீரராக்கியத்தி லிருந்து சிமெண்ட் மூட்டைகள் சரக்கு ரயில் கள் மூலமாக சேலம், ஈரோடு, திருப்பூர், இரு கூர், கூடல் நகர் (மதுரை) நெல்லை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ரயில் நிலையங்களிலிருந்து சரக்கு ரயில்கள் மூல மாக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்  2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 28 லட்சத்து 81 ஆயிரத்து 722 டன் சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலமாக சேலம் ரயில்வே கோட்டத்துக்கு ரூ.282.58 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  முதல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  வரை சரக்கு ரயில்களில் பொருட்கள் அனுப் பப்பட்டு, ரூ.241.47 கோடி வருவாய் கிடைத் தது. கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதி யாண்டில் 17.02 சதவிகிதம் அதிகரித்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி அரசியலில் சிக்கியுள்ள புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம்

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. 26 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த வாரச்சந்தை, தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய சந்தை என்று கூறப்படுகிறது. இச் சந்தையின் ஒரு மூலையில், ஒதுக் குப்புறமாக மாட்டிறைச்சி கடை கள் செயல்பட்டு வந்தன.  இந்நிலையில், கடந்த 4 மாதங்க ளுக்கு முன்பு புன்செய் புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் எவ்வித முன்  அறிவிப்புமின்றி, புல்டோசரை கொண்டு இடித்தது. மாட்டிறைச்சிக் கடை விற்பனையில் வரும் வரு வாயை வாழ்வாதாரமாய் கொண் டுள்ள 13 தலித் குடும்பங்கள், கடை கள் இடித்து தடைமட்டமாக்கியதால் கையறு  நிலைக்கு தள்ளப்பட்டனர். வட்டிக்குப் கடன் வாங்கி, குடும் பம் முழுவதும் சேர்ந்து பாடுபட்டு, கடை நடத்தி, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் அசலையும், வட்டியையும் திருப்பிச் செலுத்தி, தங்கள் குடும்பத்திற்கான வருமா னத்தையும் பார்த்து வந்த 13 பட்டி யலின குடும்பங்களின் வாழ்நிலை முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டது.  வழக்கம்போல் வாரச்சந்தை யில் கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டு அப்பாவி மக் கள் பலமுறை நகராட்சி நிர்வா கத்தை அணுகினர். ஆனால் நக ராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்தது. எனவே, உயர் அலுவலர்களுக்கும் மனு அனுப்பி வைத்தனர். நியாய மான பதில் கிடைக்கவில்லை. பட்டி யலின மக்களின் மாட்டிறைச்சிக் கடைகளை மீண்டும் வழக்கம் போல் நடத்த அனுமதிக்க வேண்டும் என  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த் தைக்கு அழைத்து, மூன்று மாத  காலத்திற்குள் சிலேட்டர் ஹவுஸ் கட்டி, கறிக்கடைகளையும் கட்டித் தருவதாக எழுத்து மூலம் உடன்பாட் டிற்கு வந்தது. அதுவரை இறைச் சியை கொண்டு வந்து சந்தையில் விற்பனை செய்யலாம் என்று வாய் மொழியாக உறுதி அளிக்கப்பட்டது.  ஆனால், உடன்பாட்டின்படி தீர் மானமும் நிறைவேற்றவில்லை, கடைகளும் கட்டவில்லை. அதேசம யம் வெளியில் இருந்து இறைச்சி யைக் கொண்டு வந்து சந்தையில் வைத்து விற்பனை செய்வதும் தடுக் கப்பட்டது. வேறு வழியின்றி நக ராட்சி அலுவலகம் முன்பு தொடர்  உண்ணாவிரதம் அறிவிக்கப்பட் டது. இந்நிலையில் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் சிலேட் டர் ஹவுஸ் மற்றும் கறிக்கடைகளை சந்தையில் விரைவில் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பது என் றும், வியாபாரிகள் வழக்கம்போல் வியாபாரத்தை சந்தையில் தொடர்வ தற்கு ஆக்கப்பூர்வமான முயற்சி களை நிர்வாகம் மேற்கொள்வது என்று மீண்டும் உறுதியளிக்கப்பட் டது. இதனால் மீண்டும் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இவ்வாறு போராட்டம் அறிவிப்ப தும், பேச்சுவார்த்தைக்கு அழைப்ப தும், உடன்பாடு காண்பதும் பொரு ளின்றி தொடர்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனை தீரவில்லை. சமூக நீதியை நிலை நாட்டும் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுவ தாக தமிழ்நாடு முதலமைச்சர் வாய்ப்பு  கிடைக்கிற இடங்களில் எல் லாம் முழங்குகிறார். ஆனால், ஆட்சி யின் கீழ் உள்ள புன்செய் புளியம் பட்டி நகராட்சி நிர்வாகத்தின் அதி காரிகளோ  ஆர்எஸ்எஸ் பரிவாரங் களின் அரசியலில் அகப்பட்டுள்ள னர். முதல்வர் தலையிட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப் பாக இருக்கிறது. - சக்திவேல்

வெயிலை தணிக்க ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சேலம், மார்ச் 13- கோடை வெயிலை தணிக்க ஏற்காட்டில் சுற்றுலா பயணி கள் வந்த வண்ணம் உள்ளனர். கோடை காலம் தொடங்கியதை அடுத்து வெயில் வாட்டி  வதைத்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள விடுமுறை நாட்களில் பொது மக்கள் மலைப்பகுதி சுற்றுலா தலங்களுக்கு படையெடுகின்றனர். குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான, ஏற் காட்டிற்கு விடுமுறை நாடகளில் சுற்றுலா பயணிகள் அதிகள வில் வருவது வழக்கம். தற்போது கோடை வெயிலை முன் னிட்டு வழக்கத்தை விட அதிகமாக சுற்றுலா பயணிகள் குவிந் துள்ளனர். ஏற்காட்டில் குளர்ச்சியான, உடல் நிலைக்கு ஏற்ற காலநிலை நிலவி வருகிறது. இதனால் விடுமுறை நாளான ஞாயிறன்று ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர்  வந்தனர். சுற்றுலா பயணிகள் அண்ணா பூங்காவில் உள்ள  செயற்கை நீரூற்றின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து பூக்கள் மற்றும் இயற்கை காட்சிகளை ரசித்தனர். இங்குள்ள ஊஞ்ச லில் விளையாடி மகிழ்ந்தனர். இங்குள்ள மலர் செடிகளை பெண்கள் தங்கள் வீட்டில் வளர்ப்பதற்காக ஆர்வமுடன் வாங்கி சென்றனர். லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்ப கூடிய படகு இல்லத்தில், நீண்ட நேரம் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

ஊரக திறனாய்வு தேர்வு:  அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை

கோவை, மார்ச் 13- ஊரக திறனாய்வு தேர்வில் கோவையைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளியங்காட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். குறிப்பாக பில்லூர் டேம், அத்திக்கடவு, மானாறு, சொரண்டி, குண்டூர் உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் இருந்தும் 200 பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஊரக திறனாய்வு தேர்வு அரசு பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தற்போது 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கலந்து கொள்வார்கள். இத்தேர்வில் 8 ஆம் வகுப்பு பாட பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 100 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வினை வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 20 மாணவர்கள் எழுதினர். இந்நிலையில் ஊரக திறனாய்வு தேர்வின் முடிவுகள் வெள்ளியன்று வெளியிடப்பட்டன. இதில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 13 மாணவர்கள் வெற்றி பெற்று கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற 100 மாணவர்களில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 13 மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில், இப்பள்ளியைச் சேர்ந்த ஆஷிகா என்ற மாணவி நூற்றுக்கு 87 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

உதகை அணைகளின் நீர்மட்டம் 90 சதவிகிதம்

உதகை, மார்ச் 13- சுற்றுலா நகரமான உத கையில் மே மாதத்தில் நடை பெறும் கோடை சீசனுக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார் கள். அப்படி வருபவர்களின்  குடிநீர் தேவையை பூர்த்தி  செய்யவும், உள்ளூர் மக்க ளின் குடிநீர் தேவையை சமா ளிக்கவும் அணைகளின் நீர்  இருப்பு மிக முக்கியமானது. இங்குள்ள முக்கிய குடிநீர்  ஆதாரங்களான 50 அடி கொள் ளளவு கொண்ட பார்சன்ஸ்  வேலி அணை, 23 அடி கொள் ளளவு கொண்ட மார்லிமந்து  அணை, 39 அடி கொள்ளளவு கொண்ட டைகர் ஹில் அணை,  35 அடி கொள்ளளவு கொண்ட கோரிசோலா அணை, 25 அடி  கொள்ளளவு கொண்ட மேல்  தொட்டபெட்டா ஆகியவற்றில்  சராசரியாக 90 சதவிகித அள வுக்கு நீர் இருப்பு உள்ளது.