திருப்பூர், டிச.12 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருப்பூர் வடக்கு ஒன்றிய குழுவின் சார்பில் டிசம்பர் 12 ல் “போதை இல்லாத திருப்பூரை உருவாக்குவோம்”, “பெண் குழந்தை களை பாதுகாப்போம்” என்ற முழக்கத் தோடு இருசக்கர வாகனப் பிரச்சார இயக் கம் நடைபெற்றது. வாவிபாளையம் பேருந்து நிறுத்தத்திலிருந்து பிரச்சார இயக்கம் துவங்கியது. ஒன்றிய தலைவர் வசந்தி தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட செயலாளர் பவித்ராதேவி துவக்கி வைத்து உரையாற்றினார். நிர்வாகிகள் பானுமதி, மங்கலட்சுமி, மீனாட்சி, ஜெயக் கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரச்சார பயணம் தோட்டத்துபாளையம், குருவாயூரப்பன் நகர், சக்தி நகர், பிச்சம் பாளையம் புதூர், ஸ்ரீநகர், அவிநாசி கவுண் டன் பாளையம், வெங்கமேடு, ஆத்துப் பாளையம், செட்டிபாளையம், நெசவாளர் காலனி வழியாக பாண்டியன் நகர் வந்த டைந்தது. நிறைவாக மாநில செயலாளர் பொன்னுத்தாய் பயணத்தை நிறைவு செய்து பேசினார். பிரச்சார பயணத்தில் மாவட்ட தலைவர் மைதிலி, துணைச் செயலாளர் ஷகிலா, வளர்மதி உள்ளிட்ட மாதர் சங்கத்தினர் இரு சக்கர வாகனத்தில் பிரச்சார பயணம் மேற் கொண்டனர்.