சேலம், செப்.15- ஆத்தூர் அருகே அரசு கலைக் கல்லூரிக்கு அருகே செயல்படும் அரசு மதுபானக்கடை உடனடியாக அகற்ற வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் வலியுறுத்தி உள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை வட சென்னிமலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 3 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின் றனர். இக்கல்லூரி வளாகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப் பட்டோர் மாணவ, மாணவியர் விடுதி களும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வட சென்னிமலை பாலசுப்பிரமணியம் கோவிலும் உள்ளது. சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையி லிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலை வில் உள்ள இக்கல்லூரிக்கு மாணவ, மாணவர்கள் நடந்து செல்வது வழக்கம்.இதற்கிடையில் கல்லூ ரிக்கு செல்லும் வழியிலேயே அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருவ தால், போதை ஆசாமிகள் மாணவி களிடம் ரகளையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் மாணவிகளுக்கு பாது காப்பற்ற சூழல் இருப்பதாகவும், கல்லூரிக்கு வரும் மாணவர்கள் சிலர் மதுபான கடைக்கு சென்று மது அருந்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, அந்த குறிப்பிட்ட மதுபா னக்கடையை அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந் துள்ளது. இதுகுறித்து செய்தியாளர் களை சந்தித்த கல்லூரி முதல்வர் சித்ரா, கல்லூரிக்கு வரும் வழியில் மதுபானக்கடை செயல்பட்டு வருவ தால், மாணவர்கள் கடும் சிரமத் திற்கு உள்ளாகி வருகின்றனர். இவ் வழியே வரும் மாணவிகளிடம் விரும்பத்தகாத செயல்களில் போதை ஆசாமிகள் ஈடுபடுவ தாகவும், ஒரு சில மாணவர்கள் நாள்தோறும் மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வருவதாகவும், இக்கடையை அகற்றக்கோரி கடந்த மார்ச் மாதம் சேலம் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பள்ளி, கல்லூரி நேரத்தில் பேருந்துகள் குறைந்த அளவில் வருவதால் மாணவ, மாணவிகள் நெரிசலில் சிக்கிக் கொள்வதாகவும், ஆத்தூர் கள்ளக் குறிச்சி - காட்டுக்கோட்டை இடையே கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் கல்லூரி முதல்வர் சித்ரா கோரிக்கை விடுத்துள்ளார்.