கோவை, ஏப். 4- பெண்கள் காவல்துறையில் பெண் காவலர்களாக நியமிக்கப்பட்டு 50 வருடங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கோவையில் உள்ள பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி மற்றும் உரிமம் பெற ஊக்கு விக்கும் விதமாக கோவை காவலர் பயிற்சி மைதானத்தில், கோவை மாநகர மற்றும் ஆயு தப்படையில் பணியாற்றக்கூடிய பெண் காவ லர்களுக்கு முதல் கட்டமாக 150 நபர்க ளுக்கு கோவை மத்திய வட்டாரப் போக்கு வரத்து உதவியுடன் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை காவல்துறையில் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனங்களை இயக்கு வதற்கு ஆண் காவலர்களை இருந்து வந்த சூழ்நிலை யில், தற்போது பெண் காவலர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக ஓட்டுனர் பயிற்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாத பெண் காவ லர்களுக்கு பயிற்சியுடன் ஓட்டுனர் உரி மமும் பெற்று தர கோவை மாநகர காவல் ஆணையர் கோவை மத்திய வட்டார போக்கு வரத்து அதிகாரிகளுடன் இணைந்து காவலர் பெண்களை ஊக்குப்படுத்தும் விதமாக முயற் சியை எடுத்துள்ளது அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.