திருப்பூர், டிச.27- பொங்குபாளையம் ஊராட்சிக்கு உட் பட்ட அனைத்து கிராமங்கள் மற்றும் குடி யிருப்புகளிலும் 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யும் அவல நிலையைப் போக்கி, வாரம் இரு முறை குடிநீர் விநியோகம் செய்ய வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப் பாட்டம் நடத்தியது. பொங்குபாளையம் ஊராட்சிக்கு உட் பட்ட அனைத்து கிராமங்கள் மற்றும் குடி யிருப்புகளிலும் 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யும் அவல நிலையைப் போக்க வழியுறுத்தி, காளம் பாளையத்தில் உள்ள பொங்குபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக திங்க ளன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொங்குபாளையம் கிளைச் செயலாளர் எஸ்.அப்புசாமி தலைமை வகித்தார். இதில் மூன்றாவது குடி நீர் திட்டத்தில் வழங்க வேண்டிய 2.30 லட்சம் லிட்டர் குடிநீரை முழுமையாக வழங்க வேண்டும். அதேபோல் நான்காவது குடிநீர் திட்டத்திலும் பொங்குபாளையம் ஊராட்சி கிராமங்களை இணைத்துக் கொள்ள வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் செ.முத் துக்கண்ணன், ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், காளம்பாளையம் கிளைச் செயலாளர் ஆர்.விஸ்வநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பி.வேலுசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 150 பெண் கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.