districts

img

திடுப்பூர் மாவட்டத்தில் 40 நாட்களுக்கும் மேலாகத் தடைபட்டுள்ள குடிநீா் விநியோகம்

திருப்பூர் ஜூலை 30- திருப்பூர் மாவட்டதில், 35க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி  குடிநீா் விநியோகம் கடந்த 40 நாட்க ளுக்கும் மேலாகத் தடைபட்டுளதால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டதில், காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் காவிரி யாற்றிலிருந்து முத்தூா், காங்கயம்,  ஊதியூா் வழியாக குழாய் அமைத்து  குண்டடம் பகுதியில் உள்ள கிராமங் களுக்கு காவிரி குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலை யில் பல்லடத்தை அடுத்துள்ள கள் ளிப்பாளையம் முதல் குண்டடம் வரையிலான சாலையை 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வரு வதுடன், பாலப்பணிகளும் நடை பெற்று வருகின்றன. இதனிடையே ருத்ராவதியில் பெரிய அளவிலான பாலம் அமைக்கும் பணியின்போது காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட பிர தான குழாய் உடைந்துவிட்டது. மேலும் பெரியபாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் குடிநீா்க் குழாய் இணைப்பை சரிசெய்ய முடி யவில்லை என கூறப்படுகிறது.

இதன்  காரணமாக மேட்டுக்கடை நீரேற்று நிலையத்தில் இருந்து (ஜம்ப்) கடந்த  ஜூன் 16 ஆம் தேதி முதல் வெருவே டம்பாளையம், முத்தியம்பட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு தண்ணீா் செல்லாமல் தடைபட்டுள் ளது. இதைத் தொடா்ந்து, நந்தவனம் பாளையம், கொக்கம்பாளையம், முத்தியம்பட்டி, பெரியகுமாரபாளை யம் ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட 35க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி குடிநீா் விநியோகம் கடந்த 40  நாட்களுக்கும் மேலாகத் தடைபட் டுள்ளது.  இது குறித்து குண்டடம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: - உள்ளூா் ஊராட்சிகள் மூலமாக விநி யோகம் செய்யப்படும் ஆழ்து ளைக் கிணற்று நீரில் உப்புத்தன்மை  அதிக அளவில் உள்ளது. இதனால் குடிக்கவும், சமையல் செய்யவும் இந்த நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குடி நீரை விலைக்கு வாங்கிப் பயன்ப டுத்தி வருகிறோம்.எனவே, குழாய் உடைப்பை சரிசெய்து காவிரி குடிநீா்  விநியோகம் செய்ய குடிநீா் வடிகால்  வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.