திருப்பூர், ஏப். 22- திருப்பூர் 17ஆவது வார்டுக்கு உட்பட்ட ஜெ.பி.நகர் பகுதியில் குடிநீர் விநியோ கத்தை முறைப்படுத்த வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. ஜே.பி. நகர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வடக்கு மாநகரக் குழு உறுப்பினர் மரிய சிசிலியா மற்றும் உமா மகேஸ்வரி, ஜானகி, சாமாத்தாள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வியாழனன்று இரண்டாவது மண்டலம் அலு வலகத்தில் அதிகாரிகளிடம் மனு கொடுத் தனர். இம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, திருப்பூர் 17ஆவது வார்டுக்கு உட்பட்ட ஜே.பி.நகர் பகுதியில் பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதை மாற்றி ஐந்து நாட்களுக்கு ஒரு முறையாவது குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை கழிவுநீர் வடிகால் தூர்வார வேண் டும். தினமும் தள்ளுவண்டி மூலம் குப்பை அகற்ற வேண்டும். பழுதடைந்த வடிகால் களை பராமரிக்க வேண்டும். பழுத டைந்த சாலைகளை புதுப்பிக்க வேண்டும். பாதாள சாக்கடை பணிகளை துரிதப்ப டுத்த வேண்டும். உப்புத் தண்ணீர் மேல் நிலை தொட்டி புதிதாக கட்டித் தர வேண்டும் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.