கோவை, ஜன.2- கோவை மாநகர மக்களின் குடிநீர் விநி யோகத்திற்கான சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என சிபிஎம் கோவை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட 23வது மாநாடு கோவை மருதமலை அடிவாரத்திலுள்ள பொதிகை மஹால் தோழர்கள் கே.தங்கவேல், கே.சி. கருணாகரன் நினைவரங்கத்தில், தோழர் கள் பி.ரவிச்சந்திரன், ஆர்.பழனிச்சாமி நுழைவு வாயிலில் ஞாயிறன்று துவங்கியது. கட்சி யின் செங்கொடியை யு.கே.வெள்ளிங்கிரி ஏற்றி வைத்தார். இதனைத்தொடர்ந்து நடை பெற்ற மாநாட்டிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் மற்றும் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ராஜலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். வரவேற்புக் குழு செயலாளர் வி.மணி வரவேற்புரை யாற்றினார். அஞ்சலி தீர்மானத்தை கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் முன்வைத்தார். மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் அ.சவுந்தி ரராசன் உரையாற்றினார். மாவட்ட செயலா ளர் வி.இராமமூர்த்தி வேலையறிக்கையை சமர்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என்.ஜெயபாலன் வரவு, செலவு அறிக் கையை முன்வைத்தார். இதில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
கோவை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த அதிமுக அரசு சூயஸ் என்கிற பன்னாட்டு நிறுவனத்தி டம் ஒப்படைத்ததை, எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதன்பின் நடைபெற்ற சட்டமன்ற தேர் தலின் போது, திமுக உள்ளிட்ட கட்சியினர் சூயஸ் உடனான ஒப்பந்தத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்தனர். இந்நிலையில் புதி தாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு உடன டியாக கோவை மாநகர மக்களின் குடிநீர் உரிமையை பன்னாட்டு சூயஸ் நிறுவனத் திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாது காப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளாமல், கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் அடிப்பதற்காக தொடர்ந்து மூலப் பொருட்களின் விலைகளை ஒன்றிய அரசு உயர்த்தி வருகிறது.
கோவையில் 50 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஒன்றிய அரசு உடனடியாக மூலப்பொருட்க ளின் விலை உயர்வை கட்டுப்படுத்துவ தோடு இந்த கொரோனா காலத்தில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிற சிறு, குறு தொழில்களுக்கான கடன் வட்டியை தள்ளு படி செய்வதோடு, கடன் செலுத்துவதற் கான தவணைக் காலத்தை நீட்டித்து தர வேண்டும். கோவை மக்களின் ஒற்று மையை சீர்குலைக்கும் நோக்கத்தோடு மத வெறி அமைப்புகள் தொடர்ச்சியாக பல் வேறு சீர்குலைவு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. கோவை மாவட்டத் தின் வளர்ச்சிக்கும், சமூக நல்லிணக்கத் திற்கு கேடு விளைவிக்கும் இந்த மதவெறி அமைப்புகளை மக்கள் தனிமைப்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் காவல் துறை நிர்வாகம் ஆகியவைகள் கல்வி நிலைய கூடங்களில் மதவெறி அமைப்புகள் நடத்தும் நிகழ்வுகளுக்கு அனுமதி தரக் கூடாது. பெண்கள், குழந்தைகள் மீதான வன் முறைகள் நாளுக்கு நாள் கோவையில் அதி கரித்து வருகிறது. இவ்விகாரத்தில் மாவட்ட நிர்வாகம் பணியிடங்கள் கல்வி நிலையங் கள் உள்ளிட்ட பகுதிகளில் பாலியல் புகார் கமிட்டி அமைத்திருப்பதை உறுதி செய்வ தோடு, தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக் கையை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற வன்கொடுமைகளுக்கு காரண மான குற்றவாளிகள் வழக்கில் இருந்து தப் பிச் செல்லாமல் இருக்க போதிய ஆதாரங் களை திரட்டி உரிய தண்டனையை பெற்றுத் தருவதை காவல்துறை உறுதி செய்ய வேண் டும்.
ஜோதிப்பயணம் - மூத்த தோழர்கள் கெளரவிப்பு
முன்னதாக, ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் ஜோதி, சின்னியம்பாளையம் தியாகிகள் ஜோதி மற்றும் கணபதியில் இருந்து கொடி பயணம் ஆகியவை மாநாட்டு அரங்குக்கு கொண்டு வரப்பட்டு தலைவர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது. இதையடுத்து தொண்டா முத்தூர் பகுதியில் ஆரம்ப காலத்திலிருந்து கட்சிப் பணியாற்றிய மூத்த தோழர்கள் தலை வர்களால் கௌரவிக்கப்பட்டனர்.