districts

img

காட்டுயானை தாக்கி குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் உயிரிழப்பு

கோவை, ஜூன் 28- கோவை குற்றாலம் அருகே காட்டுயானை தாக்கியதில், தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரிய பராம ரிப்பு உதவியாளர் பரிதாபமாக உயி ரிழந்தார். இதைத்தொடர்ந்து அவ ரது மகனிடம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் செவ்வாயன்று நிவா ரணத்தொகையை வழங்கினார். கோவை மாவட்டம், சிறுவாணி அடிவாரத்தில் உள்ள தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் காளிதாஸ் (59). இவர் அப்பகுதியில் உள்ள குடிநீர் வடி கால் வாரிய பராமரிப்பு உதவியாள ராக பணியாற்றி வந்தார். இந்நிலை யில், திங்களன்று மாலை காளி தாஸ், சாடிவயல் சோதனைச்சாவடி யிலிருந்து தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்தார். சர்க்கார் போர்த்தி பேருந்து நிலையத்தை கடந்து சென்று கொண் டிருந்தபோது, அப்பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டுயானை, காளி தாசை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த காளிதாசை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், காளிதாஸ் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் கள் தெரிவித்தனர். இதுகுறித்த தக வலின்பேரில் சம்பவ இடத்திற்கு  சென்ற காருண்யா நகர் காவல் துறை யினர், காளிதாஸின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த னர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த காளி தாசின் குடும்பத்தினருக்கு வனத் துறை சார்பில் ரூ.5 லட்சம் அரசு நிவா ரண உதவித்தொகைக்கான காசோ லையினை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி னார். இந்நிகழ்வில், மாவட்ட வன  அலுவலர் அசோக்குமார் உட்பட வனத்துறை அலுவலர்கள் உடனி ருந்தனர்.