ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி வடக்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆத்துப்பாளையம் கிளை சார்பில் மின் பொறியாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில், ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே. மாரப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர் சந்தோஷ், கிளைச் செயலாளர் சங்கர், மாதர் சங்கச் செயலாளர் கீதாலட்சுமி, மாற்றுத்திறனாளி அரங்கச் செயலாளர் பாண்டியன் மற்றும் கிளை உறுப்பினர்கள் பொது மக்கள் உட்பட்ட 70க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.