districts

img

நோயற்ற வாழ்வுக்கு மன அழுத்தத்தை கையாள

திருப்பூர், நவ. 5 - இன்றைய வாழ்க்கைச் சூழலில் நோயற்ற  வாழ்வுக்கு நாம் மன அழுத்தத்தைக் கையா ளத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் கே.சுந்தரமூர்த்தி கூறினார். திருப்பூரில் உடல்நலம் குறித்து விழிப்பு ணர்வுக் கூட்டம் பின்னல் புக் டிரஸ்ட் நிர்வாகி  ஆர்.ஈஸ்வரன் தலைமையில்  வெள்ளிக்கி ழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எலும்பு  முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே. சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு உடல் நலன்  பேணுவது குறித்து விரிவாக விளக்கிப் பேசி னார். அப்போது அவர் கூறியதாவது:  நமது உடல்நலத்தைப் பேணுவதில் நாம்  அக்கறையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும். உடல் நலம் நன்றாக இருக்க தூக் கம் மிக அவசியம். 6 மணி நேரம் தூக்கம் என்ற  அளவு முக்கியம். அதே சமயம் அந்த தூக்கம்  நல்ல தூக்கமாகவும் இருக்க வேண்டும். ஒரு  குழந்தையைப் போல் நாம் தூங்க வேண்டும்.  தூக்கத்தின் அளவு, தரம் இரண்டுமே நம் உடல் நலனுக்கு மிக முக்கியம். தூங்குவதற்கு முன்பாக செல்பேசிக ளைப் பார்த்துவிட்டு நேரம் காலம் இல்லா மல், காலம் கடந்து தூங்குவது ஆரோக்கியப்  பிரச்சனையை ஏற்படுத்தும். 

அதேபோல் வாழ்க்கையில் நிம்மதி மிக முக்கியம். யாரைக் கேட்டாலும் நிம்மதி இல்லை என்று சொல்லும் நிலை உள்ளது. நிம்மதி என்பதற்கான அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நமது சொந்த கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த் தாலே இப்போது ஏற்பட்டிருக்கும் முன்னேற் றம் தெரியும். ஆனால் நாம் பெற்ற இந்த முன் னேற்றத்தை நமக்கு அனுபவிக்கத் தெரிய வில்லை. சின்னச் சின்ன வெற்றிகளைக் கூட  நாம் மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும். இன் றைய நாளை நாம் மதிப்புடன் செலவிட்ட திருப்தி வேண்டும். வாழ்க்கையில் திட்டமி டல் மிக அவசியம். திட்டமிட்டு நாம் நம்  நேரத்தை செலவிடும்போது அதில் திருப்தி  கிடைக்கும்.

வாழ்க்கையில் கிடைக்கும் பொருட் களை பயன்படுத்துவது என்பது வேறு, அதை  அனுபவிப்பது என்பது வேறு. இலக்கு, சாதனை, வெற்றி, லாபம் என்று ஓடிக் கொண் டிருப்பது வாழ்க்கையை அனுபவிப்பதல்ல. இலக்கு தேவைதான். 

நம் வாழ்க்கை முறையில் மனஅழுத்தம் (ஸ்ட்ரெஸ்) மிக முக்கிய பிரச்சனையாக உள் ளது. அதைக் கையாளத் தெரிந்து கொள்ள  வேண்டும். மன அழுத்தம் இல்லாத நிலை என் பது வேறு, ஆனால் மன அழுத்தம் இருக்கும்  நிலையில் அதை எப்படி கையாள்வது என் பதை தெரிந்து கொண்டு வாழ வேண்டும். வாழ்க்கையின் விஷ சுழற்சியில் சிக்கிக்  கொண்டிருக்கிறோம். அந்த விஷ சுழற்சியில்  இருந்து விடுபடுவதற்கு நமது மனதுக்குப் பிடித்த விசயங்களைச் செய்ய வேண்டும். உழைப்பதற்கும் ஒரு அளவு கட்டுப்பாடு வேண்டும். குழந்தைகளுடன் செலவிட நேரம் ஒதுக்க வேண்டும். குழந்தைகளுக்கு சம்பாதித்து, செல்வம் சேர்த்து வைப்பதை விட, அவர்கள் சம்பாதித்து வாழ்வதற்கு கற்றுக் கொடுக்க வேண்டும். வாழ்க்கை ஒரு மிகப்பெரும் வெகுமதி, வாய்ப்பு, அதை அனுபவித்து வாழக் கற்றுக் கொள்ள  வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற் றோர் கேட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கம்  அளித்தார். அப்போது ஆங்கில மருத்துவ முறையில் மருத்துவர்கள் நன்றாக ஆராய்ந்து தான் மருந்துகள் தருகின்றனர். அவர்கள் தரும் மருந்துகள் நீண்ட காலம்  சாப்பிட வேண்டியதை கட்டாயம் தொடர்ந்து  சாப்பிட வேண்டும், சித்தா, ஹோமியோபதி,  ஆயுர்வேதம் உள்ளிட்ட பிற மருத்துவ முறை கள் வரும் முன் காக்கும் மருத்துவ முறைக ளாக, நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். (ஆன்லைன்) புக்கிங் செய்து சாப்பிடு வதை விட குக்கிங் (சமைத்து) செய்து சாப்பி டும் நல்லது. எந்த உணவாக இருந்தாலும், அதை அளவாக சாப்பிட வேண்டும். 50 வய துக்கு மேல் காய்கறி, கீரை வகைகளை அதி கமாக்கி கொண்டு, சோற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். நமது மருத்துவர்கள் நல்ல மருந் தைத்தான் தருகிறார்கள் என்ற நம்பிக் கையோடு நாம் எடுத்துக் கொள்ள வேண் டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் திரளா னோர் கலந்து கொண்டனர்.