districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வரதட்சணை புகார்: அரசு மருத்துவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

தருமபுரி, ஜன.10- நல்லம்பள்ளி அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப் படுத்திய அரசு மருத்துவர் உட்பட 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள மாதேமங்கலம் கிரா மத்தைச் சேர்ந்தவர் முருகவேல். இவ ரது மகள் மைதிலி (25). தருமபுரி, செந் தில் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (65). இவரது மகன் ஆனந்தன் (40). அரசு மருத்துவரான இவர் பண்டஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி யாற்றி வருகிறார். ஆனந்தனுக்கும், மைதிலிக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திரு மணம் முடிந்த 5 நாட்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்துள்ளனர். அப்போது  மைதிலியிடமிருந்து 10 பவுன் நகையை வாங்கிகொண்டு மருத்துவர் ஆனந்த னும், அவரது குடும்பத்தினரும் மேலும் 30 பவுன் நகையும், சொகுசு காரும் வாங்கி தருமாறு தொந்தரவு செய்துள் ளனர். நகையும், காரும் கொடுத்தால் தான் உன்னுடன் சேர்ந்து வாழ்வேன் என கொடுமைப்படுத்தியதாக கூறப்படு கிறது. இந்நிலையில், வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக மைதிலி தருமபுரி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் புகார ளித்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க அனைத்து மகளிர் காவல் துறையின ருக்கு காவல் கண்காணிப்பாளர் ஸ்டீ பன் ஜேசுபாதம் உத்தரவிட்டார். அதன் பேரில் விசாரணை நடத்திய அனைத்து  மகளிர் போலீசார் மருத்துவர் ஆனந் தன், அவரது தாய் பழனியம்மாள், தந்தை ராமச்சந்திரன் ஆகிய 3 மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

321 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தருமபுரி, ஜன.10- மோட்டாங்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 321  பேருக்கு ரூ.1.46 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோட் டங்குறிச்சி கிராமத்தில் புதனன்று மக்கள் தொடர்புத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற் றது. அப்போது 321 பயனாளிகளுக்கு ரூ.1.46 கோடி மதிப் பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங் கினார். இந்நிகழ்ச்சியில் அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராஜ சேகர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் யசோதா மதிவா ணன், கடத்தூர் ஒன்றியக்குழு தலைவர் உதயா மோகனசுந்த ரம், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜகுரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்

நாமக்கல், ஜன.10-  குமாரபாளையம் திருச்செங்கோட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வடக்கு நகரத் துக்குட்பட்ட நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர் களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடை பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட நகர மன்ற தலை வர் விஜய்கண்ணன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்வில் நகர மன்றத் துணைத் தலைவர் வெங்கடேசன், நகர பொறுப்புக்குழு உறுப் பினர்கள் ஜேம்ஸ், நகர்மன்ற உறுப்பினர்கள்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மழையால் கொண்டைக்கடலை மற்றும் கொத்தமல்லி விளைச்சல் பாதிப்பு

உடுமலை, ஜன.10- கரிசல் பூமியில் பனிப் பொழிவிற்கு வள ரும் கொண்டைக்கடலை மற்றும் கொத்த மல்லி பயிர்கள், பருவம் தவறிய மழையால் பூ  மற்றும் பிஞ்சுகள் கீழே வீழ்த்து விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகு தியில் கரிசல் மண் கொண்ட மானவாரி நிலங் களில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்யும் பனிக்கு வளரும் கொண்டைக்கடலை மற் றும் கொத்தமல்லியை விவசாயம் செய்வது  வழக்கமான நடைமுறை. இந்த ஆண்டும்  சுமார் எட்டாயிரம் ஏக்கரில் கொண்டைக்கட லையும், சுமார் ஆறாயிரம் ஏக்கரில் கொத்த மல்லியும் விவசாயம் செய்யப்பட்டு உள் ளது. கரிசல் பூமியில் பனிப்பொழிவில் மட்டும்  வளரும் வகையில் இந்த பயிர்கள் இருப்ப தால் இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த கனம ழையால் செடியில் இருக்கும் பூ மற்றும் பிஞ்சு கள் கீழே வீழ்த்து செடிகள் மட்டுமே காணப் படுகிறது.  இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வருடம் முழுவதும் விவசாயம் செய்ய முடியா மல் இருக்கும் கரிசல் மண் பூமியில் இயற் கையான பனிப்பொழிவை மட்டுமே நம்பி  கொண்டைக்கடலை, கொத்தமல்லி மட்டுமே  விளைச்சல் செய்ய முடியும். ஏக்கர் ஒன்றுக்கு  இந்த பயிர்கள் விளைச்சல் செய்ய உழவு,  விதை, உரம், நான்கு முறைக்கும் மேல் மருந் துகள் என பத்தாயிரத்துக்கும் மேல் செலவு செய்யப்படுகிறது. விளைச்சல் கைக்கு வரும்  நிலையில் இப்பொழுது பெய்த மழையால் செடிகளில் இருந்த பூ மற்றும் பிஞ்சுகள் விழுந்து செடி மட்டுமே உள்ளது. எனவே  கொண்டைக்கடலை விளைச்சல் பாதிப்பு  குறித்து வேளாண்துறையும், கொண்டைக்க டலை பாதிப்புகள் குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் விரைவாக விளைநிலங் களை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசா யிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித் தார்கள்.

திருப்பூரில் அரசு உறுதிமொழிக்குழு ஆய்வுக்கூட்டம்: பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக தகவல்

திருப்பூர், ஜன.10- தமிழ்நாடு சட்டப்பேரவையில் வழங் கப்பட்ட உறுதிமொழிகள் அடிப்படை யில் அனைத்துப் பணிகளும் நிறைவேற் றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்த தன் அடிப்படையில் அனைத்து பணிக ளும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன் பாட்டில் உள்ளது. சில பணிகள் நடை பெற்று வருகிறது என உறுதிமொழிக் குழுவின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை யின் அரசு உறுதிமொழிக்குழு ஆய்வுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் செவ்வாயன்று நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு பின், தமிழ்நாடு சட்ட மன்றப்பேரவை உறுதிமொழிக் குழுவின் தலைவர் மற்றும் பண்ருட்டி  சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முரு கன்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததா வது, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையி ன் 2023-24 ஆம் ஆண்டுக்கான அரசு  உறுதிமொழிக் குழு திருப்பூர் மாவட்டத் தில்  நிலுவையில் உள்ள அரசு உறுதி மொழிக்கள் மீது தொடர்புடைய துறை கள் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்து இன்றைய தினம் மாவட் டத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. இதனைத்  தொடர்ந்து, தற்போது அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் ஏற்கனவே அளிக்கப்பட்ட நிலுவையில் உள்ள 125 உறுதிமொழிகளில், 37  உறுதிமொழிகள் அனைத்தும் முடிக் கப்பட்டு கைவிடப்பட்டது, 6 உறுதி மொழிகள் படித்து பதிவு செய்யப்பட் டது, 82 உறுதிமொழிகள் நிலுவையில் வைக்கப்பட்டது. 2022-க்கு பின் பேர வைக்கு அளிக்கப்பட்டது 55 உறுதிமொ ழிகள், அதில் 21 உறுதிமொழிகள் நிறை வேற்றப்பட்டு மக்களுக்கு திட்டங்க ளாக அற்பணிக்கப்பட்டு உறுதிமொழி பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட் டது. மேலும், நிலுவையில் இருக்கும் 34  உறுதிமொழிகள், இந்த உறுதி மொழிக் குழு மாவட்ட ஆட்சியர் தலைமையில்  மாவட்டத்தில் நிறைவேற்றப்பட வேண் டிய உறுதிமொழிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு சட் டப்பேரவையில் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் அடிப்படையில் அனைத்துப்  பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ததன் அடிப்படை யில் அனைத்து பணிகளும் முடிக்கப் பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள் ளது. சில பணிகள் நடைபெற்று வருகி றது. நிலுவையில் உள்ள உறுதிமொழி கள் உடனடியாக நிறைவேற்ற வேண் டும் என்ற உரிய அறிவுரைகளையும், உரிய வழிகாட்டுதல்களையும் இக்குழு  மேற்படி மாவட்டத்தின் அரசு அலுவ லர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி  செல்வராஜ், அரசு உறுதி மொழிக்குழு  உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், மேயர்.ந.தினேஷ்குமார், மாநகர காவல் ஆணையர் பிரவீன்கு மார் அபிநபு, மாநகராட்சி ஆணையா ளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் உட் பட அனைத்து அரசுத்துறை அலுவலர் கள் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவர்களுக்கு இலவச கண்ணாடி

உதகை, ஜன.10- மேபீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கண்பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டது உதகையில் பார்வை குறைபாடு உள்ள பள்ளி மாண வர்களுக்கு புதனன்று மேபீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்  பள்ளியில் இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இந்நி கழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பால் விக்டர் தலைமை  வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரஷீத் முன்னிலை வகித்தார். சீனிவாசன் அறக்கட்டளையின் கூடலூர் கள இயக்குனர் சௌந்தர்ராஜன் இலவச கண்ணா டிகளை வழங்கும் முகாமை துவக்கி வைத்தார். அதன் ஒருங் கிணைப்பாளர் திலகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

பெற்றோர் திட்டியதால் சிறுவன் தற்கொலை

கோவை, ஜன.10- கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(57). இவரது மகன் லோஹித்(15). இவர் தனி யார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலை யில், லோஹித் செல்போனை நீண்ட நேரம் பயன்படுத் தியதால், அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இத னால் மன உளைச்சலுக்கு ஆளான லோஹித், திடீரென  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை யடுத்து, சரவணம்பட்டி போலீசார், சிறுவனின் உடலை கைப் ்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானைகள்

நீலகிரி, ஜன.10- குன்னூரில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள் குடியி ருப்பு பகுதிக்குள் நுழைய விடாமல், தேயிலை தோட்டம் வழி யாக வனத்துறையினர் விரட்டினர். நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் கடந்த 7 நாட்க ளுக்கு மேலாக எட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. காட்டேரி,  உலிக்கல் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்ற யானைகள், அங்கிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தின. இந்த நிலையில், புதனன்று அதிகாலை காட்டேரி அருகே உள்ள  ”டேன் டீ”  குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானைக்  கூட்டங்கள், அங்கிருந்து வாழைமரங்களை சேதப்படுத்தி யது மட்டுமில்லாமல், ரேசன் கடைகளில்  வைக்கப்பட்டி ருந்த கரும்புகளையும் ருசி பார்த்தன.  உடனே, தகவலறிந்து வந்த குன்னூர் வனத்துறையினர், மக்களின்  பாதுகாப்பு கருதி யானைகளை விரட்டும் நடவ டிக்கை ஈடுபட்டனர். அப்போது, யானைகளை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய விடாமல், தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலைகளின் வழியாக, சுமார் 5 கிலோ மீட்டர் வரை  விரட்டினர்.

வாகனத்தை வழிமறித்து நின்ற யானைக்கூட்டம்

ஆ.ராசா எம்பி.,யின் வாகனம் சிக்கியது

ஈரோடு, ஜன.10- நலத்திட்ட நிகழ்வில் பங்கேற்ற ஈரோடு மாவட்டம் கேர்மாளம் அருகே, திமுக துணைப் பொதுச்செயலாரும், நீலகிரி நாடா ளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வாக னத்தில் செல்கையில், காட்டு யானைக்கூட் டம் பாதையை வழிமறித்து நின்றதால் பர பரப்பு ஏற்பட்டது.  ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகு திக்குட்பட்ட தாளவாடி, கடம்பூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதியில் ரூ.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எம்.பி., ஆ.ராசா தொடங்கி வைத்தார். விழா வில் கலந்து கொண்டு தாளவாடி மலைப் பகுதியில் இருந்து கடம்பூர் செல்வதற்காக அடர்ந்த வனப்பகுதியில் கேர்மாளம் நோக்கி,  ஆ.ராசா எம்.பி. வாகனம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனம், வனத்துறையினர் வாகனம் சென்று கொண்டிருந்தது. கேர்மாளம் அருகே அடர்ந்த வனப்பகு தியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது, அந்த வாகனங்களை வழிமறித்து சாலையின் நடுவே 3 யானைகள் கூட்டம் நின்றது. வனப்பகுதிக்குள் செல்லாமல் அங் கேயே வழிமறித்து நின்றதை அடுத்து, வனத் துறையினர் ஜீப் மூலம் அதிக சத் தம் கொண்ட ஒலிகளை எழுப்பினர். அத னைத்தொடர்ந்து அந்த யானைக்கூட்டம் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென் றது. அதன்பின் ஆ.ராசா எம்.பி. வாகனம் வனப்பகுதியை கடந்து சென்றது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி

ஈரோடு, ஜன.10- கேலோ இந்தியா விளையாட்டு போட்டி கள் தொடர்பான விழிப்புணர்வு வாக னத்தை, ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில், அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.  கேலோ இந்தியா விளையாட்டு போட்டி கள் வருகின்ற 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி  வரை தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு மாவட்டங் களில் நடைபெற உள்ளது. இதுகுறித்து, பொது மக்களிடையே தொடர்ந்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் விழிப்புணர்வு வாகனங்கள் இயக் கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஈரோடு  மாவட்டத்திற்கான விழிப்புணர்வு வாக னத்தை தமிழக வீட்டு வசதி மற்றும் நகரப் புற வளர்ச்சித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்து சாமி கலந்துகொண்டு துவக்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும்  இடங்களில் நிறுத்தி வைக்கப்பட உள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கந்துவட்டி கொடுமை: வாலிபர் தற்கொலை

கோவை,ஜன.10- பொள்ளாச்சி அருகே கந்து வட்டி கொடு மையால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய் துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர்  தினசரி கூலி வேலைக்கு சென்று வருகிறார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு வரத ராஜ், பொள்ளாச்சியைச் சேர்ந்த கிருஷ்ண குமார் என்பவரிடம் ரூ25 ஆயிரம் கடனாக  பெற்றுள்ளார். இதனையடுத்து, கிருஷ்ணகு மார் கந்துவட்டி என்று வரதராஜிடம் அதிக  வட்டி வாங்கி உள்ளார். மேலும், வரதராஜை  தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகாத  வார்த்தை பேசி, கொலை மிரட்டல் விடுத்துள் ளார். இதனால், மனம் உடைந்த வரதராஜ், தான் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப் பட்டதாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை போலீசார், வரதராஜ் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்,  வழக்கு பதிவு செய்து கந்துவட்டி கொடுமையின் கீழ் கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். கந்து வட்டி கொடுமையால் வாலிபர் ஒருவர் தற் கொலை செய்துகொண்ட சம்பவம், பொள் ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள் ளது.

பழங்குடியினரின் நிலம் அபகரிப்பு மலைவாழ் மக்கள் சங்கம் புகார்

தருமபுரி, ஜன.10- பழங்குடியினரின் நிலத்தை போலி பத்தி ரப்பதிவு செய்து கிரையம் செய்ததை ரத்து  செய்து, நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, சென் னையில் உள்ள நில நிர்வாக ஆணையரிடம் மனு அளித்துள்ளார். அம்மனுவில் கூறியிருப்பதாவது, தரும புரி மாவட்டம், அரூர் வட்டத்திற்குட்பட்ட கோட்டப்பட்டி, சிட்லிங் ஊராட்சி பகுதிகளில்  பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். பழங் குடியின மலையாளி மக்கள் பூர்வீகமான நிலங்களில் விவசாயம் செய்து பிழைத்து வரு கின்றனர். இந்த நிலங்களுக்கு அரசு டி-கார்டு  வழங்கியுள்ளது. இந்நிலையில், பழங்குடி மக்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்துள்ள வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிக்க சமூகத் தினர், போலி பத்திரப்பதிவு மூலம் பழங்கு டியின மக்களின் நிலங்களை அபகரித்துள் ளனர். கிட்டத்தட்ட இப்பகுதியில் சுமார் 100  குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக அரூர் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார ளிக்கப்பட்டுள்ளது. அரூர் கோட்டாட்சியர் தருமபுரி மாவட்ட பத்திரப்பதிவு அலுவல ருக்கு இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கடிதம் அனுப்பினார். ஆனால், மாவட்ட பதிவாளர் பாதிக்கப்பட்ட மக்கள் இடத்தில் எந்தவித விசாரணையும் செய்யா மல் தட்டி கழித்து வருகிறார். எனவே, போலி  பத்திரம் மூலம் பழங்குடியின மக்களின் விவ சாய நிலங்கள் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து, நிலங்களை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“வேர்ல்ட் வெஜ் கோல்டன் ஜூபிலி ஸ்காலர்ஷிப்” வேளாண் கல்லூரி முதுநிலை மாணவர்கள் தேர்வு

கோவை, ஜன.10- வேர்ல்ட் வெஜ் கோல்டன் ஜூபில் ஸ்காலர்ஷிப்-க்கு  கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் கல்லூரி முதுநிலை  மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முது நிலை மாணவர்களான கி.அரவிந்த்ராஜு (வேளாண் பூச்சியி யல்), கேசம்ரெட்டி லோகேஷ்வர் (உழவியல்), எஸ்.கௌ சல்யா (பயிர் நோயியல்) மற்றும் முதுகலை மாணவர் முகமது  ஷிருக்பாஷி (பயிர் வினையியல்) ஆகியோர் தைவானின்  உலக காய்கறி மையம் வழங்கும் ‘வேர்ல்ட் வெஜ் கோல் டன் ஜூபிலி ஸ்காலர்ஷீப்-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகெங்கிலும் உள்ள முதுகலை மற்றும் முதுநிலை பயி லும் மாணவர்கள் போட்டியிடும் இத்திட்டத்தில் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களின் பயோ-டேட்டா மூலம் ஆய்வு செய்யப்பட்டு, குழு உறுப்பினர்கள் மூலம் நேர்காணல் நடைபெற்றது. முதுநிலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு முறையே ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருடத்திற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், மாணவர்கள் வரும் கல்வியாண்டில் தைவானில் உள்ள உலக காய்கறி மையத்தில் தங்கள் ஆராய்ச்சியை மேற்கொள்வார்கள். இக்காலத்தில், தைவானில் உள்ள உலக காய்கறி மையத்தில் பயணத்தொகை மற்றும் இல வச தங்குமிடத்துடன் மாதாந்திர உதவித்தொகை (500 USD)  பெறுவார்கள். இந்த உதவித்தொகை கடந்த கால கல்வி சார் சிறப்பையும், விண்ணப்பதாரர்களின் பயோ -டேட்டா வையும் அங்கீகரிக்கிறது மற்றும் நிதி உதவியுடன் வெளி நாட்டு கூட்டு ஆராய்ச்சி வாய்ப்புகளை வழங்குகிறது. இதற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தமிழ்நாடு  வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதா லட்சுமி, பயிர் மேலாண்மை இயக்குநர் எம்.கே.கலாராணி, பயிர் பாதுகாப்பு ஆய்வு மைய இயக்குநர் எம்.சாந்தி, முது கலை பட்ட மேற்படிப்பு பயிலக முதன்மையர் ந.செந்தில், வேளாண் பூச்சியியல் துறை தலைவர் எம்.முருகன், உழவி யல் துறை தலைவர் பி.பரசுராமன், பயிர் நோயியல் துறை தலைவர் கே.அங்கப்பன் மற்றும் பயிர் வினையியல் துறை  தலைவர் ஏ.செந்தில் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

வனத்துறை பாதுகாப்புடன் பள்ளி சென்ற மாணவர்கள்

உதகை,ஜன. 10- உதகையில் மிண்டும் சிறுத்தை  நடமாட்டத்தையடுத்து, வனத்துறை யின் பாதுகாப்புடன் மாணவர்கள் பள் ளிக்கு சென்றனர். உதகையில் தொடர்ந்து மனிதர் களை தாக்கும் சிறுத்தை பிடிபட்ட நிலை யில், மேலும் ஒரு சிறுத்தை அந்த பகுதி யில் நடமாடி வருவதை அப்பகுதி மக் கள் பார்த்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மேங்கோரேஞ்ச் அரசு  துவக்க பள்ளிக்கு வரும் மாணவர் களை, பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப் பாமல் இருந்தனர். இது குறித்து பள்ளி  தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் வனத்து றையிடம், பாதுகாப்பான முறையில் மாணவர்களை அழைத்து வர. வேண்டு கோள் விடுத்தனர்.  அதனைத் தொடர்ந்து புதனன்று காலை வனச்ச ரகர் சஞ்சீவி தலைமையிலான வனக் குழுவினர், கவுன்சிலர் ஜாபீர், தலைமை  ஆசிரியர் செல்வி ஆகியோர், பள்ளி  மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக  சென்று வனத்துறை வாகனத்தில் அவர் களை பாதுகாப்புடன் பள்ளிக்கு அழைத்து வந்தனர். இதனால் மாணவர் களுக்கு சிறுத்தை அச்சமின்றி பள் ளிக்கு வந்தனர். மேலும் மாலை நேரங்க ளில் பள்ளி விடும்போதும் வீடுகளுக்கு பாதுகாப்பான முறையில் அழைத்துச் சென்று விடப்படுவார்கள், என வனத் துறை தெரிவித்தனர்.