அவிநாசி, மார்ச் 4- அவிநாசி அருகே மங்கரசுவலையபா ளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி விளையாட்டு விழா, ஆண்டு விழா, மரபுசார் விதைத் திருவிழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. விழாக்கு மாவட்டக் கல்வி அலுவலர் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவ லர்கள் மகேஷ்வரி, சுமதி, திருநாவுக்கரசு, ஊராட்சித் தலைவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் சூரியப்பிரகாஷ் வரவேற்றார். சொற்பொ ழிவாளர்கள் புலவர் நல்.தங்கராஜ், கோவை சாந்தாமணி ஆகியோர் பேசினர். இதைய டுத்து பள்ளிக்கு கணினி அறை, நூலக கட் டடம் அமைக்க தொழிலதிபர் கோவை துரை சாமி, பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் தம்பு (எ) தாமோதரன் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் நிதி அளித்தனர். இத்துடன் பள்ளி மாணவர்களுக்கு வண்ண சீருடை வழங்கிய ஹேம்நாத் மெமோ ரியல் டிரஸ்ட் நிர்வாகி தேவராஜ் ஆகியோ ருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிறைவாக நடைபெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது. பள்ளி ஆசிரியை பிரதீபா, கல்யாணி ஆகி யோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.