சேலம், அக்.9- சேகோ பாக்டரிகளில் உற்பத்தி யாகும் சேகோ மற்றும் ஸ்டார்ச் மூட்டைகள் அனைத்தையும் சேகோ சர்வுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் ஜில்லா சுமை தூக்கும் தொழி லாளர்கள் சங்கம், சேகோ சர்வ் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தி னர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் சேகோ சர்வ் தெற்கு ஆசியாவி லேயே மிகப்பெரிய தொழில் கூட்டு றவு சங்கமாக உள்ளது. சேலம் மாவட் டத்தை சுற்றியுள்ள நாமக்கல், கள் ளக்குறிச்சி, விழுப்புரம், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்குகளால் உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசியை சேகோ குடோனுக்கு கொண்டு வந்து தர மதிப்பீடு செய்து அதன் பின்பு வியா பாரிகள் வாங்கி செல்வது வழக்கம். ஆனால், சமீப காலமாக சேகோ உற் பத்தியாளர்களிடமிருந்து ஜவ்வரிசி நேரடியாக விற்பனைக்கு அனுப்பப் படுவதால், அரசுக்கு வருவாயும் தொழி லாளர்களுக்கு தொழில் பாதிப்பும் ஏற்படுகிறது. மேலும், தர ஆய்வு செய்யப்படாததால் ஜவ்வரிசியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலப் படங்கள் சேர்க்கப்பட்டு தரம் இல் லாத ஜவ்வரிசி பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சிறு குறு வியாபாரிகள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக் கானோருக்கு கடுமையான வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆலையில் இருந்து நேரடியாக விற்பனை செய்யக் கூடாது என்று முழுமையாக அமல்ப டுத்தி சேகோ ஆலையில் உற் பத்தியாகும் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் அனைத்து மூட்டைகளை யும் சேகோ சர்வ் நிறுவனத்திற்கு கட் டாயம் கொண்டு வருவதன் மூலமே கலப்படத்தை தடுக்க முடியும் என வும், சேகோ சர்வ் நிறுவனம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட் டதோ அதனை பாதுகாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி ஆர்ப்பாட்டத்த்தில் ஈடுபட்ட னர். முன்னதாக, சங்கத்தின் பொதுச் செயலாளர் எ.கோவிந்தன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தலைவர் பி.ஆறுமுகம், சம்மேளனத் தலைவர் ஆர்.வெங்கடபதி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.