திருப்பூர், செப்.19- வங்கதேசத்திலிருந்து பின்னல் துணி மற்றும் ஆயத்த ஆடை இறக்கு மதி செய்வது ஆண்டுக்கு ஆண்டு அதிக ரித்து வருகிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக் கப்பட்டு இருப்பதாக திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்கம் கவலை தெரிவித் துள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தின் 33 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை ஐ கே எஃப் ஏ அரங்கில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் தலைமை ஏற்று பேசிய சங்கத் தலைவர் கே.எம். சுப்பிரமணியன், கடந்த ஓராண்டு கால அறிக்கையை முன் வைத்தார். அப்போது அவர் பேசும் பொழுது வங்கதேசத்திலிருந்து பின்னல் துணி மற்றும் பின்னல் ஆடைகள் பெருமளவு இறக்குமதி ஆவது குறித்து தெரிவித் தார். குறிப்பாக இந்தியாவுக்கும் வங்க தேசத்திற்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இதன் அடிப்படையில் வங்கதேசத்தி லிருந்து சுங்க வரி விதிக்கப்படாமல் பின்னல் துணி வருவது ஆண்டுக்கு ஆண்டு, மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகிறது. இது உள்நாட்டு உற்பத்தி யாளர்களை கடுமையாக நேரடியாக பாதிக்கிறது. குறிப்பாக, கடந்த 2022 - 23 ஆம் ஆண்டு மொத்த பின்னல் துணி இறக்கு மதி என்பது முந்தைய ஆண்டு இருந்த 212 கோடி ரூபாய் என்பதிலிருந்து 264 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இது 24.3% அதிகரிப்பு ஆகும். அதேபோல் சுங்கவரி இல்லாமல் ஆயத்த ஆடைகள் வருகையும் பெரு மளவு அதிகரித்து இருக்கிறது. கடந்த 2021 - 2022 ஆம் ஆண்டில் 1576 கோடி ரூபாயாக இருந்த இந்த இறக்குமதி 2022 - 2023 காலகட்டத்தில் ரூ.2489 கோடியாக அதாவது 57.9% உயர்ந்தி ருக்கிறது. இந்த இறக்குமதியை கட்டுப்படுத்து வதற்கு பொருத்தமான ஒரு நடை முறையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்வதாக கே எம் சுப்பிரமணியன் கூறியுள்ளார். அதாவது பின்னல் துணியினுடைய இறக்குமதி சுமார் 25 சதவிகிதமும், பின்னல் ஆடையின் இறக்குமதி சுமார் 58 சதவிகிதமும் ஒரே ஆண்டு இடைவெளியில் அதிகரித்து இருக் கிறது.
இதனால் சிறு குறு நடுத்தர பின்ன லாடை உற்பத்தியாளர்கள் குறிப்பாக, திருப்பூரைச் சேர்ந்த உற்பத்தியாளர் கள் தங்களுடைய உற்பத்தி இழப்பை யும், வேலை இழப்பையும், வருமான இழப்பையும் சந்திக்கும் நிலை ஏற்பட் டுள்ளது. இந்த மோசமான நிலையில் இருந்து உள்நாட்டு உற்பத்தியாளர் களையும், உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியையும் பாதுகாப்பதற்கு ஒன்றிய பாரதிய ஜனதா அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக் கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் புள்ளி விவரங்களை தெரிவித்து இருந் தாலும், மத்திய அரசிடம் மென்மை யான முறையில் கோரிக்கை வைத்தி ருந்தாலும், பாதிப்பு என்பது மிகக் கடுமையாக இருக்கிறது. இதே பிரச்சனையில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவுண்டர் வெயிலிங் என்ற தடுப்பு வரியை நிர்ணயித்து வங்கதேசத்தி லிருந்து இறக்குமதி ஆகும் அளவை கட்டுப்படுத்தியது. ஆனால் அதையும் மோடி அரசு நீக்கி விட்டதால் தற் போதைய பாதிப்பு தொடர்கிறது. எனவே, ஒன்றிய மோடி அரசு உள் நாட்டு தொழிலை பாதுகாப்பதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு போல ஒரு பொருத்தமான நடை முறையை உருவாக்க வேண்டும் என்பது அவசர அவசியமாகும். திருப்பூர் உள்நாட்டு உற்பத்தியாளர் களின் யோகோ பித்த எதிர்பார்ப்பாக இந்த கோரிக்கை உள்ளது. எதையும் செவிமடுக்காத மோடி அரசு இதை யாவது கேட்குமா?