திருப்பூர், ஆக.16- மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள மருத்து வக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கல்லூரி கருத்தரங்க கூடத்திலேயே சடல மாக மீட்கப்பட்டார். மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இச்சம் பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி யது. இந்நிலையில் உயிரிழந்த மருத்துவ மாணவியின் மறை விற்கு அஞ்சலி செலுத்தக் கூடிய வகையில் வியாழனன்று, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளா கத்தில் மருத்துவ மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் கருப்பு பட்டை அணிந்தும் , கொலைக்கு நீதி கேட்டும் , இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாகவும் பதாகைகளை ஏந்தி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட னர்.