சேலம், பிப்.8- திமுக அரசு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என சேலத்தில் காணொளி காட்சி வழியாக நடை பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத் தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் தெரிவித்தார். தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டா லின் காணொலிக் காட்சி மூலமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சேலத்தில் திங்க ளன்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசுகையில், சேலம் மாவட் டத்திற்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்த ஆட்சி திமுக ஆட்சி தான். சேலத்தை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு பயனுள்ள எந்த திட்டத்தையும் சேலம் மாவட்ட மக் களுக்கு கொண்டு வரவில்லை என அவர் குற்றம் சாட்டினார். மேலும், திமுக தேர்தல் அறிக் கையில் கூறிய வாக்குறுதிகளில் 70 சதவிகிதம் நிறைவேற்றப்பட் டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 29 ஆயிரத்து 716 மனுக்களுக்கு தீர்வு காணப் பட்டுள்ளது. ஆவின் பால் விலை குறைப்பு, பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கி களில் பெறப்பட்ட நகை கடன்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக் கள் பெற்ற கடன்களும் முழுமை யாக ரத்து செய்துள்ளது. இவ் வாறு எட்டு மாத காலத்தில் எண் ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப் பட்டு உள்ளது. இதனடிப்படை யில், சேலம் மாவட்டத்தில் மக்க ளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றும். இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். முன்னதாக, காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த பிரச் சாரக் கூட்டத்தையொட்டி சேலத் தில் அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்தி ரன், திமுக மேற்கு மாவட்ட பொறுப் பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ். ஆர்.சிவலிங்கம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர்.