கோவை, ஜன. 6- திமுக கோவை மண்டல மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான நேர்காணல் கோவையில் நடைபெற்றது. இதில், கோவை தெற்கு, வடக்கு, மாநகர், கரூர், திருப்பூர் வடக்கு, தெற்கு, ஈரோடு வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளை சேர்ந்தோர் பங்கேற்றனர். கோவை-காளாப்பட்டி கெட்டிமேளம் மகாலில் நடை பெற்ற நேர்காணல் நிகழ்விற்கு திமுக மாணவரணி செய லாளர் சட்டப்பேரவை உறுப்பினர் சிவிஎம்பி.எழிலரசன் தலைமை தாங்கினார். இதனை முன்னாள் ஒன்றிய அமைச் சரும், நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, மின்சாரம், மதுவிலக்குமற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நேர்காணலில், திமுக மாணவரணி தலைவர் இரா. ராஜீவ் காந்தி, இணை-துணை செயலாளர்கள் சி.ஜெரால்டு, எஸ்.மோகன், மன்னை த.சோழராஜன், சேலம் ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், பொன்ராஜ், விஜி, கோகுல், பூரண சங்கீதா, வீரமணி மற்றும் மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தோ.அ.ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.