districts

விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என்னாச்சு?

விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என்னாச்சு? திமுக துணைச்செயலாளர் கேள்வி கோவை, ஜூன் 19- முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய கோடிக்கணக்கான ஆவணங்கள் பற்றி இன்னும் அமலாக்கத்துறை அதிகாரி கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக செய்தி தொடர்பு துணைச் செயலாளர் கோவை செல்வராஜ் கேள்வி  எழுப்பியுள்ளார். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் திமுக செய்தி தொடர்பு துணை செயலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வருகிற 23 ஆம் தேதி பீகார்  மாநிலத்தில் மத சார்பற்ற அனைத்து கட்சியின் கூட்டம் நடை பெற உள்ளது.இதன் மூலம் மக்களின் சக்தி பற்றி பாஜக வினர் தெரிந்து கொள்வார்கள். ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுவதாலும், இந்திய அரசியலமைப்பு சட்ட அதிகா ரத்தை மீறி செயல்படுவதாலும் இவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மத்திய துறை, அமலாக்கத்துறை, வரு மான வரித்துறை என அனைத்து துறைக்கும் அண்ணா மலை பதில் சொல்கிறார். பாஜக இவருக்கு என்ன பதவி கொடுத்துள்ளது என சொல்ல வேண்டும்.  மேலும், அண்ணாமலைக்கு வீட்டு வாடகை, விமானம்  டிக்கெட் எல்லாம் நண்பர்கள் கொடுக்கிறார்கள் என்றால்  மாதம் 9 லட்சம் நன்கொடையாக வாங்குகிறார். இரண்டரை வரு டத்தில் 3 கோடி வரை பணம் பரிமாற்றம் செய்யபட்டுள்ளது. வாங்கிய பணத்திற்கு வருமான வரி கட்டி உள்ளாரா?, அதே போல பணம் கொடுத்தவர்களும் வரி கட்டி உள்ளனரா? என் பதை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். அப்போதைய அதிமுக முதலமைச்சர் ஜெயலலிதா, பாஜ கவின் கூட்டனியுடன் சேர மாட்டேன் என்றார். ஆனால், அதனை எடப்பாடி மறந்துவிட்டு தற்போது செயல்பட்டு கொண்டிருக்குறார். அதிமுகவை கம்பெனி போல் நடத்து வது, இவர்கள் கொள்ளையடித்து  சம்பாதித்த பணத்தை பாது காத்து கொள்வதற்காகவே பாஜகவுடன் கூட்டணியில் உள்ள னர். 2017 ஆம் ஆண்டு முன்னாள் சுகாதாரத்துறை அமைச் சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரி கள் சோதனை என்பது கோடிக்கணக்கான ஆவணங்கள் சிக்கி யது. இது சம்மந்தமான குற்ற பத்திரிக்கை வழக்கு எங்கே, எப்போது, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும். பாஜக  தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் புகுந்த நபர் திடீர் மர்ம  மரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றார்.