districts

img

ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி யால் திருப்பூர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது: தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேச்சு

அவிநாசி, பிப்.10- திருப்பூர்  ஒன்றிய அரசின் ஜி.எஸ். டியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது என தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. திருப்பூரில் நடைபெற்ற கூட் டத்தில் குற்றம் சாட்டினார். 2024 மக்களவை தேர்தலை யொட்டி, தேர்தல் அறிக்கை தயா ரிப்பதற்காக தி.மு.க. துணைப்  பொதுச்செயலாளர் கனிமொழி கரு ணாநிதி எம்.பி. தலைமையில் 11 பேர்  கொண்ட குழு அமைக்கப்பட்டுள் ளது. “உரிமைகளை மீட்க ஸ்டாலி னின் குரல்  நாடாளுமன்றத்தில் ஒலித் திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்து கள் என்ற தலைப்பில் பல்வேறு தரப் பினரின் கருத்துகளை கேட்டு வருகி றது. அதன் ஒரு பகுதியாக இக்குழு  இன்று திருப்பூர் மாவட்டம் திருமுரு கன் பூண்டியில் உள்ள தனியார் விடு தியில் நடைபெற்ற கூட்டத்தில் பங் கேற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கரு ணாநிதி எம்.பி. பேசுகையில், திமுக  சார்பில், நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க இந்த குழு உரு வாக்கப்பட்டு தமிழகதில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களின், தொழில் துறையினரின் கருத்து களை கேட்டு அறிக்கை தயார் செய்ய  எங்களை முதல்வர் நியமித்துள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் துவங்கி தற்போது வரை பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, அனைத்து மக்கள் மற்றும் தொழில்  துறையினர், சமூக சேவகர்களின் கருத்துகளை கேட்டு வருகிறோம். இன்று திருப்பூரில் உங்களை சந்தித் தது எங்களுக்கு மகிழ்ச்சி. திமுக மக் களின் கருத்துகளை கேட்டறிந்து ஆட்சி செய்து, உங்களுடைய குர லாக உள்ளது. தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற போது கூறியது போல், வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காதவர் களுக்குமான ஆட்சியாக இந்த ஆட்சி  இருக்கும் என்பது போல் திராவிட  மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.  இந்த அடிப்படையில் தான் மீண்டும் உங்களை தேடி வந்துள்ளோம். தொழில் நகரமான திருப்பூர் ஒன் றிய அரசின் ஜி.எஸ்.டி யால் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும்,  ஒவ்வொரு நாளும் மதம், மொழி  பெயரால் நம்மை பிரித்து காயப்ப டுத்தி வருகிறார்கள். இந்த நாடு  அனைவருக்குமான நாடு. இதன்  அடிப்படையை யாரும் அழிக்கக்கூ டாது என நம் திராவிட அரசு போராடி  வருகிறது. நம் பிள்ளைகளுக்கான  பாதுகாப்பை நம் தான் உருவாக்க  முடியும். வரும் தேர்தல் வெறும்  ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலாக இல்லாமல் நாட்டை பாதுகாப்பதற் கான தேர்தலாக இருக்க வேண்டும்,  என்றார். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, ஈரோடு, கரூர்  மாவட்டங்க ளைச்  சேர்ந்த தொழில் துறையினர், கல்வியாளர்கள், தொழில் முனை வோர்கள், புலம்பெயர்ந்த தொழிலா ளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலி யலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற் றும் தனியார் துறை ஊழியர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும், தேர்தல்  அறிக்கை தயாரிக்கும் குழுவின ரிடம் தங்கள் கோரிக்கைகளை அளித் தனர்.