சேலம், ஏப்.5- ஓமலூரில் சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பா ளர் டி.எம்.செல்வகணபதி, கூட்டணி கட்சி தலைவர்களுடன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இந்தியா கூட்டணி சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகு தியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதி ஓம லூர் பேரூராட்சி, காமலாபுரம், பொட்டியபுரம் வெள்ளா ளப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது திமுக அர சால் கொண்டு வந்த திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேக ரிப்பில் சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியில் சேலம் மத் திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர். அதேபோல், ஓமலூர் அருகே உள்ள கருப்பணம்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓமலூர் தாலு காச் செயலாளர் ஈஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் தமிழரசு, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அரி யாக்கவுண்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.