districts

img

திமுக கூட்டணி 40க்கு 40ம் வெல்லும்: உதயநிதி

கோவை, ஏப்.17- இந்த நாடாளுமன்றத் தேர்தல் சுயமரியாதை காரனுக்கும், சர்வாதிகாரிக்குமான தேர்தல், இதில், தமிழகத்தில் திமுக தலைமையிலான  இந்தியா கூட்டணி 40 தொகுதியிலும் வெல்வது உறுதி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி னார்.  இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ் குமாரை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில்  பல்வேறு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது வாக்களர்கள் மத்தியில் பேசிய அவர், வருகின்ற நாடாளுமன்றத் தேர் தல் சுயமரியாதைகாரனுக்கும், சர்வாதிகாரிக் குமான தேர்தல். நான் எப்போதும் ஒரே பேச்சு  தான் பேசுகிறேன் என எடப்பாடி பழனிச்சாமி  குற்றம் சாட்டுகிறார். எடப்பாடி பழனிச்சாமிக்கு இருப்பது ஒன்பது வாய், ஒன்பது நாக்கு எனக்கு ஒரு வாய், ஒரு நாக்கு மட்டும்தான் உள்ளது. அறிஞர் அண்ணா, அம்பேத்கர், பெரியார் பேசி யதை மட்டும் தான் பேசுவேன். எய்ம்ஸ் வேண் டும் என்று பேசுவேன். எடப்பாடி பழனிச்சாமி போல் மாத்தி மாத்தி என்னால் பேச முடியாது. திமுக 40க்கு 40 ஜெயிக்கப்போவது உறுதி. மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோவை யில் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஜெயிக்க  வைக்க வேண்டும். பொது மக்களுக்கு சொல் வதை செய்யாத பிரதமர் மோடியை, 29 பைசா  என அனைவரும் அழைக்க வேண்டும். பாஜக வும், அதிமுகவும் கள்ளக்கூட்டணி; தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் கூட்டணி வைத்து விடுவார்கள், என்றார்.