districts

img

திமுகவின் தேர்தல் வியூகம் ரகசியமானது அமைச்சர் முத்துச்சாமி பேட்டி

கோவை, பிப்.9- திமுகவின் தேர்தல் சுற் றுப்பயணக் குழு, மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே தேர்தல் அறிக்கை வெளிவர உள்ளதென அமைச்சர் முத்துசாமி தெரி வித்தார். கோவை மாவட்டம், சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ரூ.4 கோடி  மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்கள்  திறக்கும் நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற் றது. இதில் அமைச்சர் முத்துசாமி பங் கேற்று கட்டிடங்களை திறந்து வைத்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திமுகவின் தேர்தல் வியூகம் என்பது ரகசியமானது. அதற்கான குழு இன்று  (10.02.24) கோவை, திருப்பூர் மாவட்டங்க ளுக்கு வருகை தர உள்ளது. தேர்தல் சுற்றுப் பயணக் குழு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின் தேர்தல் அறிக்கை வெளி வர உள்ளது.  அத்திக்கடவு – அவிநாசி திட்டப் பணி கள் முடிவடைந்த பிறகும், சில பணிகள் நிறைவு பெறாமல் இருந்து வருகிறது. அது குறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கருத் துகள் கேட்கப்பட்டு, அவர்களிடம் இருந்து நிலத்தைப் பெற்ற பின்பே, அத்திக்கடவு -  அவிநாசி திட்டம் முழுமையாக நிறைவேற் றப்படும் என்றார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.