கஞ்சா வியாபாரி கைது
ஈரோடு, அக். 12- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், ஜனதா நகரைச் சேர்ந்தவர் தனபால் (28). இவர் ஈரோடு மாணிக்கம் பாளையம் அருகே மாரியம்மன் கோவில் பின்புறம் விற்ப னைக்கு வைத்திருந்த 350 கிராம் கஞ்சாவுடன் பிடிபட்டார். இதுகுறித்து ஈரோடு வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை - கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு
கோவை, அக்.12- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடைவீதிகளில் கூட்டம் அலைமோதுகிற நிலையில், பொதுமக்களின் உடமைகளை சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாக்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபு ரங்கள் அமைக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கோவை மாநகரில் தீபாவளி பண்டி கையை முன்னிட்டு போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய கடை வீதி, ராஜ வீதி, ஒப்பணகார வீதி, கிராஸ்கட் ரோடு, டி.பி ரோடு உள்பட 50க்கும் மேற்பட்ட முக்கிய வணிக, வர்த்தக பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கூட்ட நெரிசலை கண்காணிக்க நகரில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் (வாட்ச் டவர்) அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் பைனா குலர் மூலமாகவும், கண்காணிப்பு கேமரா மூலமாகவும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூக விரோதிகளிடமிருந்து மக்களின் உடமைகளை பாதுகாக்க கண்காணித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் தவிர்க்க, முக்கிய சாலைகளில் போலீசார் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல் வேறு இடங்களில் வாகனம் நிறுத்தும் இடங் கள் முறைப்படுத்தப்பட்டு வருகிறது. நெரிசல் மிகுந்த இடங்களில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. காந்தி புரம், உக்கடம் ஆகிய பேருந்து நிலையங் களில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதியில் போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். வெளியூர் மற்றும் உள்ளூர் திருடர்கள் 150 பேரின் போட்டோ வைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இவர்கள் கோவையில் லாட்ஜ், ஓட்டல்களில் தங்கி கைவரிசை காட்ட முயற்சிபதாக தகவல் வந்துள்ளது. இவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், பண்டிகைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்களால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. வழக்கமான நாட்களைகாட்டிலும் 2 மடங்கு வாகன போக்குவரத்து அதிகமாகி விட்டது. இதனை சரி செய்வது கடினமாக உள்ளது. போக்கு வரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கண் காணிப்பு பணி நடந்து வருகிறது. கடை வீதி களில் நிறுவனத்தினர் வாகனங்கள் நிறுத்த இட வசதி செய்து தர வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தப்படும் வாகனங்கள் அப்புறப்படுத்தப்படும். நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. தீபாவளி முடியும் வரை மாலை நேரங்களில் கூடுதல் போலீசார் கண் காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர் என் றனர். சேலம் இதேபோன்று சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சேலம் கடை வீதி, புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலைய பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோது கிறது. குறிப்பாக சேலம் கடை வீதி, 4 ரோடு, 5 ரோடு, புதிய பேருந்து நிறுத்தம் உள்பட பல பகுதிகளில் மாலை நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது.
மனைவி கொலை - கணவன் தலைமறைவு
சேலம், அக்.12- சேலத்தில் மனைவி யைக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய கணவரை காவல் துறையினர் தீவிர மாகத் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், சீலநா யக்கன்பட்டி வேலநகர் தெருவைச் சேர்ந்தவர் ராஜ சேகரன் (42). அவரது மனைவி கார்த்திகை தேவி (35). இவர்களுக்கு சக்தி என்ற மகள் (10) உள்ளார். இந்நிலையில், செவ்வா யன்று இரவு அனைவரும் வீட்டில் உறங்கச் சென்றுள் ளனர். அதிகாலை மகள் எழுந்து பார்த்தபோது தாய் உயிரிழந்து கிடந்ததும், தந்தை இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். இதையடுத்து அருகிலிருந்த உறவினர்கள் வீட்டில் பார்த்தபோது கார்த்திகை செல்வி சடல மாகக் கிடந்துள்ளார். இதுதொடர்பாக அன்ன தானப்பட்டி காவல் துறை யினருக்குத் தகவல் தெரி விக்கப்பட்டது. இதை யடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கார்த்திகை செல்வியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு உடற்கூறாய் விற்காக அனுப்பி வைத் தனர். மேலும், தலைமறை வாக உள்ள ராஜசேகரனை காவல்துறையினர் தீவிர மாகத் தேடி வருகின்றனர்.
சேலம்: ரத்ததான முகாம்
சேலம், அக்.12- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ் சுருள் சங்கம், அரசு ரத்த வங்கியுடன் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடை பெற்றது. இம்முகாமை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் ரவீந்திரன், இளைஞர் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ். பத்மசேகரன், பதிவாளர் ஆர்.பாலகுருநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வேலம்பாளையத்தில் மக்கள் தொடர்பு முகாம்
வேலம்பாளையத்தில் மக்கள் தொடர்பு முகாம் திருப்பூர், அக். 12 – திருப்பூர் மாநகராட்சி வேலம்பாளையம் பகுதியில் நடை பெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 172 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புதன்கிழமை நடை பெற்றது இதில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தோட்டக்கலை துறை, தொழிலாளர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 172 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட் டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில் நடை பெற்ற இம்முகாமில் திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமார், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க.செல்வராஜ். மற்றும் அதி காரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அந்தந்த துறைகளின் சார்பில் அரங்கு கள் அமைத்து தங்கள் துறை சார்பாக செய்யப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து பட விளக்கங்களுடன் காட்சிப்ப டுத்தி இருந்தனர். பயனாளிகள் இதில் திரளாக பங்கேற்ற னர்.
குப்பைகளால் பரவும் காய்ச்சல்: ஜெய்வாபாய் பள்ளி மேலாண்மை குழுவினர் மேயரிடம் கோரிக்கை
திருப்பூர், அக்.12- திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள் ளியில் சேகரமாகும் குப்பை காரணமாக, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு ஏற்படு வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரிடம் பள்ளி மேலாண்மை குழுவினர் கோரிக்கை விடுத் துள்ளனர். திருப்பூர் ஜெய்வாபாய் மேல்நிலைப் பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் ரத்னா தலைமையில் உறுப்பினர்கள், திருப் பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை சந் தித்து மனு கொடுத்தனர். ஜெய்வாபாய் மேல்நிலை பள்ளியில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் இருப்ப தால், இங்கு சேரும் தினசரி குப்பைகளின் அளவும் அதிகளவில் உள்ளது. சத்துணவு கழி வுகள் ஈரப்பதத்துடன் இருப்பதாலும், பள்ளி வளாகத்தை சுற்றி ஆங்காங்கே புதர்கள் இருப்பதாலும் அதிகளவு கொசுக்கள், ஈக்கள் உருவாகின்றன. இதனால் டெங்கு, டைப் பாய்டு மற்றும் பல்வேறு நோய்கள் உருவாகி இங்குள்ள மாணவிகள் மற்றும் ஆசிரியர்க ளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. ஆத லால் குப்பைகள் முறையாக அகற்றி, தின சரி பள்ளியில் கொசு மருந்துகள் அடிக்க வேண்டும். பள்ளியின் நுழைவாயிலின் எதிர்புறம் சாலையோரப் பூங்காவை அகற்றி நிழல் குடை அமைத்துக் கொடுத்தால் பேருந்துகள் அந்த வழியாக வந்து, மாணவிகளை அழைத் துச் செல்லவும், பெற்றோர்கள், மாணவிகள் சிரமமின்றி நிற்கவும் ஏதுவாக இருக்கும் என்று கேட்டு கொண்டனர். எல்லா பிரச்ச னைகளுக்கும் தீர்வு காணப்படும் என மேயர் உறுதியளித்தார். போக்குவரத்து இடையூறு அத்துடன் பள்ளி மேலாண்மை குழுவினர் திருப்பூர் வடக்கு போலீஸ் துணை ஆணையர் அனில்குமாரை சந்தித்து மனு கொடுத்தனர். இதில்,பள்ளிக்கு முன்பும், எதிர்ப்புறமும் சாலை ஓரத்தில் சிலர் சுகாதாரமற்ற உணவு பண்டங்கள் விற்பனை கடைகள் போட்டு, வாகனங்களையும் நிறுத்தியுள்ளனர். இத னால் பலவித இடையூறுகள் ஏற்படுகிறது. கூட்டம் அதிகமாகி மாலை நேரம் மாணவி களை ஏற்றிச்செல்ல வரும் பேருந்துகள், ஆட்டோ, வேன், மற்றும் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அத னால் பள்ளி விடும் நேரங்களில் இந்த கடை கள் மற்றும் வாகனங்களை நிறுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ரயில் நிலையம் வழியாக செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஜெய்வா பாய் பள்ளியின் வழியே வந்து செல்லவும், அப்போது போலீஸ் பாதுகாப்பு போடவும் கேட்டுக் கொண்டனர்.
தென்னம்பாளையம் சந்தையில் மேயர் ஆய்வு சீரமைப்பு செய்வதாக விவசாயிகளிடம் உறுதி
திருப்பூர், அக். 12 – திருப்பூரில் இரு நாட்கள் பெய்த கனமழை யில் சீர்குலைந்து சேறும், சகதியுமாக மாறிய தென்னம்பாளையம் சந்தையில் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண் டார். சேறு நிரம்பிய சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அப்போது அவர் விவசாயிகளிடம் உறுதியளித்தார். திருப்பூர் மாவட்டத்தில் திங்கள், செவ் வாய் இரு நாட்கள் இரவு பலத்த மழை பெய் தது. இதனால் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தென்னம்பாளையம் தினசரி காய்கறி சந்தையில் விவசாயிகள் காய்கறி விற்பனை செய்த இடத்தில் சேரும், சகதியுமாக மாறி யது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் காய்கறி வாங்கச் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படும் நிலை இருந்தது. இதனால், தென்னம்பாளையம் சந்தை யில் கடை அமைத்துள்ள வியாபாரிகள் மற் றும் விவசாயிகள் புதன்கிழமை காலை காய் கறிகளை சாலையில் கொட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்த னர். இந்த விபரம் அறிந்த மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் புதனன்று நேரில் சந்தைக்கு வந்து ஆய்வு செய்வதாக தெரிவித்தார். இதன்படி புதனன்று காலை தென்னம் பாளையம் சந்தைக்கு வருகை தந்த மேயர், துணை மேயர் ஆகியோர் அங்கு மழையி னால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டனர். சந்தை பகுதி யில் தேங்கியுள்ள நீரை அகற்றி 24 மணி நேரத் தில் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப் படும் என்று மேயர் ந.தினேஷ்குமார் தெரி வித்தார்.
உடுமலையில் இலவச ஆங்கில பயிற்சி வகுப்புகள்
உடுமலை, அக்.12- உடுமலை கிளை நூலகம் எண் 2 சார்பில் வாசகர்களுக்கு இலவச ஆங்கிலப் பயிற்சி மற்றும் சுருக்கு எழுத்து பயிற்சி நடத்தப்படுகிறது. உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் இரண்டில் நூலகத்தில் வாசகர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் இலவச பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசு போட்டி தேர்வுகளுக் கான பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வாசகர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளும், ஆங்கில சுருக்கு எழுத்து வகுப்புகளும் இலவசமாக நடத்த தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர். அதன்படி பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் நூலக வாசகர்களுக்கு வரும் அக்.14 ஆம் தேதி முதல் ஞாயிறுதோறும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை 2 மணி நேரம் இந்த பயிற்சிகள் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கிளை நூலகம் எண் 2 நூலகத்தை அணுகலாம் என நூலகர் கலாவதி மற்றும் நூலகர்கள் மகேந்திரன் பிரமோத் அஷ்ரப் சித்திகா மற்றும் நூலக வாசகர் வட்ட த்தினர் தெரிவித்துள்ள னர்.
போதை எதிர்ப்பு இலக்கியப் பரிசளிப்பு
திருப்பூர், அக். 12- கனவு இலக்கிய வட்டம் நடத்திய போதைப் பொருள் எதிர்ப்பு சார்ந்த இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ - மாணவியர்க ளுக்கு பாண்டியன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பரி சளிப்பு நடைபெற்றது. கவிதை, கட்டுரை, ஓவி யங்கள் சார்ந்த போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்க ளுக்கு சமூக ஆர்வலர் கேபிள் ராஜ் பரிசளித்தார். பாண்டியன்நகர் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் அய்யர், எழுத் தாளர் சுப்ரபாரதிமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை - 5 ஆண்டு சிறை
உதகை, அக்.12- உதகை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உதகை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவருக்கு 7 வகுப்பு படிக்கும் குழந்தை உள்ளது. இந் நிலையில், அவர் தனது பக்கத்து வீட்டு நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரிடம் தினமும் வேலைக்கு செல்லும்போது வீட்டு சாவியை கொடுத்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், அந்த சிறுமி பள்ளி முடிந்து வீட்டு சாவியை வாங்குவதற்காக ஸ்ரீகாந்தின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஸ்ரீகாந்த் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உதகை ஊரக மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஸ்ரீகாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை மகளிர் நீதி மன்றத்தில் நடந்து வந்த நிலையில், புதனன்று தீர்ப்பு வழங்கப் பட்டது. இதன்படி குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீகாந்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதி பதி நாராயணன் தீர்ப்பளித்தார். மேலும், அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
502 கிலோ குட்கா கடத்தல்: 5 பேர் கைது
கோவை, அக்.12- சூலூர் அருகே வாகன சோதனையின் போது காரில் கடத்தி வரப்பட்ட 502 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வடமாநில இளைஞர்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர். கோவை மாவட்டம், சூலூரை அடுத்த செங்கோடகவுண் டன்புதூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைய டுத்து அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப் படுத்தினர். இந்நிலையில், அப்பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்டனர். அப் போது காரில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற் பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, குட்கா பொருட்களுடன், காரிலிருந்த 5 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற் கொண்டனர். அதில், கர்நாடகாவிலிருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்தது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கணபத் ராம், தினேஷ், ஹைத்மத்ராம் மற்றும் கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், சரவணகுமார் ஆகியோர் என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கடத்தி வரப்பட்ட 502 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் முன்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
சேலம் - கோவை பயணிகள் ரயில் ரத்து பண்டிகை காலத்தில் ரயில் சேவையை நிறுத்துவதா?
கோவை, அக்.12- தண்டவாள பராமரிப்பு காரணமாக சேலம் - கோவை பயணிகள் ரயில் அக்.12 ஆம் தேதி (நேற்று) முதல் 18 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. கோவை - திருப்பூர் ரயில் நிலையங்க ளுக்கு இடையே தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. இதையொட்டி ஞாயிற் றுக்கிழமை தவிர தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் - கோவை பயணிகள் ரயில் (06802) மற்றும் கோவை - சேலம் பாசஞ்சர் (06803) ஆகிய ரயில்கள் அக்.12 ஆம் தேதியன்று (நேற்று) முதல் அக்.30 ஆம் தேதி வரை முழு வதுமாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்த நேரத்தில் 18 நாட்களுக்கு உள்ளூர் மக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ரயில்வே நிர்வாகம் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு சேலம் - கோவை பாசஞ்சர் ரயிலை தீபாவளி வரை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை - 20 ஆண்டு சிறை
ஈரோடு, அக்.12- சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் ஒருவருக்கு ஈரோடு நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்தவர் ராஜா (34). இவர் ஈரோடு அருகே ஆர்.என்.புதூரில் உள்ள உறவி னர் வீட்டிற்கு கெடா விருந்திற்கு வந்துள் ளார். அங்கு சிறுமி அறிமுகமாகி பழக் கத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனைய டுத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது தொடர்பாக பவானி மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் அளித்த புகார் தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் போக்சோ வழக்கில் ராஜாவை கைது செய்தனர். இவ்வழக்கு ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றி போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட் டது. சம்பந்தப்பட்ட ராஜா சுமார் ஒரு ஆண்டு காலம் தலைமறைவாகியிருந் தார். பின்னர் ஈரோடு சம்பத் நகரில் பிடி பட்டார். இதனைத் தொடர்ந்து ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவ் வழக்கின் தீர்ப்பு செவ்வாயன்று அளிக் கப்பட்டது. அதில் ராஜாவிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அப ராதம் ரூ.5 ஆயிரம் விதிக்கப்பட்டது. அபராதத்தொகை செலுத்த தவறினால் 3 மாத சிறை தண்டனை கூடுதலாக அனுபவிக்க வேண்டும். மேலும், மேற் படி வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணத் தொகை ரூ. 2 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். பாலி யல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலி ருந்து ஒரு மாத காலத்திற்குள் இழப்பீட் டுத் தொகை செலுத்த வேண்டும் என்று நீதிபதி ஆர்.மாலதி உத்தரவு பிறப்பித் தார்.
5 மாதங்களில் 7,382 விமானங்கள் இயக்கம்
கோவை, அக்.12- கொரோனா தொற்று பரவல் ஏற் படுத்திய பாதிப்பில் இருந்து கடந்த சில மாதங்களாக கோவையில் விமான போக்குவரத்து மீண்டு வர தொடங்கி உள்ளது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை யில் 5 மாதத்தில் 7,382 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளி நாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் தொழில் துறையினர் பயன் அடைந்து வருகின்றனர். தற்போது தினமும் 24 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின் றன. கடந்த 2021 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் உள் நாட்டு போக்குவரத்து பிரிவில் 3,127 விமானங்களும், சர்வதேச பிரிவில் 131 விமானங்களும் என 3,258 விமா னங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந் தாண்டில், இந்த ஆண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையில் 5 மாதத்தில் உள் நாட்டு போக்குவரத்து பிரிவில் 6,862 விமானங்களும், சர்வதேச பிரிவில் 520 விமானங்களும் என 7,382 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1,460 விமா னங்கள் இயக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையரகம் தெரிவித்துள் ளது. இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், கோவை மட்டுமின்றி நாடு முழுவதும் விமான போக்குவரத்தில் நிலையான வளர்ச்சி காணப்படுகிறது. தீபாவளி, கிறிஸ்துமஸ். புத்தாண்டு என விழா காலம் வரவிருப்பதால் விமானங்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கையும் எதிர்வரும் மாதங்களில் பல மடங்கு அதிகரிக்கும், என்றனர்.
மது போதையில் பேருந்து இயக்கம்
இளம்பிள்ளை, அக் 12- சேலம் மாவட்டம், இளம் பிள்ளை - கே.ஆர். தோப்பூர் வழியாக மினி பேருந்து இயங்கி வருகிறது. இந்நி லையில் புதனன்று பேருந்து கே.ஆர். தோப்பூரிலிருந்து இளம்பிள்ளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அப்பொழுது ஓட்டுநர் தாறு மாறாக பேருந்தை இயக்கி யுள்ளார். இதனையறிந்த பய ணிக்கும் பொதுமக்களும் இ. மேட்டுக்காடு வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதி யில் பேருந்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மகுடஞ்சாவடி காவல் துறையினர் மது போதையில் பேருந்து ஓட்டிய சின்னப்பம் பட்டி பகுதியைச் சேர்ந்த சிவா (38) என்பவரை கைது செய்தனர்.