districts

img

ஊத்துக்குளியில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட மாநாடு வரவேற்புக் குழு அமைப்பு

திருப்பூர், ஜூலை 9 – இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட  19ஆவது மாநாடு வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் வியாழ னன்று ஊத்துக்குளியில் நடைபெற்றது. இக்கூட்டம்  ஊத்துக்குளியில் சங்கத்தின் தாலுக்கா தலைவர் க.லெனின் தலைமையில் நடைபெற்றது.  தாலுக்கா செயலாளர் கு.பாலமுரளி வரவேற்றார். மாவட்ட  செயலாளர் செ.மணிகண்டன், மாவட்ட தலைவர் பா.ஞான சேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர். குமார், தமுஎகச கிளை தலைவர் கை.குழந்தைசாமி, சி.பி.எம்.  தாலுக்கா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி ஆகியோர் மாநாட்டை ஊத்துக்குளியில் நடத்த வேண்டிய அவசியம் குறித்து உரையாற்றினர். இதையடுத்து வருகிற ஆகஸ்ட் 7,8 தேதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருப்பூர் மாவட்ட 19வது மாநாட்டை  ஊத்துக்குளி நகரத்தில் சிறப்பாக நடத்துவது என தீர்மா னிக்கப்பட்டது. மாநாட்டு வரவேற்பு குழு சிறப்பு தலைவ ராக ஆர்.குமார்,  தலைவராக கை.குழந்தைசாமி,  செயலாளராக கு.பாலமுரளி, பொருளாளராக ச.சசிக்குமார்  உட்பட 55 பேர்.  கொண்ட வரவேற்பு குழு தேர்வு செய்யப்பட் டது. இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் அருள், பால சுப்பிரமணி,ராம்கி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.  ச.விக்னேஷ் நன்றி தெரிவித்தார்.