districts

img

புத்தக சேமிப்பு உண்டியல்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

மேட்டுப்பாளையம், ஜூலை 23- மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் தொடக்கத்தை புத்தக சேமிப்பு உண்டியல்கள் வழங்கி ஆட்சியர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மேட்டுப்பாளையம் புத்தகத் திருவிழா வரவேற்பு குழு, கல்வி வளர்ச்சி நாள்  சிறப்பு நிகழ்ச்சி மேட்டுப்பாளையத் தில் நடைபெற்றது. ஆகஸ்ட் 23 ஆம்  தேதி முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை பத்து நாட்கள் மேட்டுப்பாளையத்தில் நான்காம் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக வரும் மாதம் முழு வதும் வாசிப்பதை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள் ளன. அந்த அடிப்படையில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு புத்தகத் திரு விழா வரவேற்பு குழுத்தலைவரும், நகர் மன்றத் தலைவருமான மெஹரிபர பர் வீன் தலைமை வகித்தார். புத்தகத் திரு விழா வரவேற்புக்குழு செயலாளர் வழக் கறிஞர் மஸ்தான் வரவேற்றார். வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யத்தின் முதல்வர் பாலசுப்ரமணியன் புத் தகத் திருவிழாக்களின் அவசியம் குறித்து பேசினார். இக்கூட்டத்தின் நோக் கம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் மாநில பொதுச்செயலாளர் முக மது பாதுஷா மற்றும் மருத்துவர் மகேஸ் வரன் ஆகியோர் பேசினர். இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி புத்தக சேமிப்பு உண்டியல்கள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்து, ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்று வழங்கினார்.  இவ்விழாவில் பேசிய ஆட்சியர், மாவட்ட தலைநகரங்களைத் தாண்டி மேட்டுப்பாளையம் போன்ற ஊர்களி லும் புத்தகத் திருவிழாக்கள் நடப்பது வரவேற்கத்தக்க ஒன்று. மாணவர்களி டையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும், புத்தகத் திருவிழாவை வெற்றி பெற வைக்க வேண்டும், என் றார். விழாவில் சிறப்பான தேர்ச்சியை கொடுத்த 170 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார். வெற்றி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசி ரியர்களை, ஆட்சியர் கௌரவித்தார். இந்நிகழ்வில், 20 ஆயிரம் மாணவர்க ளுக்கு, புத்தக சேமிப்பு உண்டியல்கள் வழங்கப்பட்டன. இந்த உண்டியலில் சேமிக்கும் பணத்தை கொண்டு மாண வர்கள் புத்தகங்கள் வாங்குவார்கள். இதனால், மாணவர்களின் வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.  புத்தகத் திருவிழா வரவேற்பு குழு வைச் சேர்ந்த ராஜாமணி எம்.சு. மணி,  ஹெச்.பி. ஹம்சா, ரிஷி சரவணன், அன் சர் அலி, ராஜேந்திரன், மருத்துவர் அர விந்த் விஷால் ஆகியோர் விழாவிற் கான ஏற்பாடுகளை செய்து இருந்த னர்.  இக்கூட்டத்தை மாநிலச் செயலாளர் மஹபுநிஷா ஒருங்கிணைத்தார். முடி வில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் செயலாளர் மணி நன்றி கூறினார்.