நாமக்கல், அக்.24- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்செங்கோடு நகராட்சியில் பணி யாற்றும் 350 பேருக்கு, புத்தாடைகள் வழங்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு நகராட்சியில் 282 ஒப்பந்த தூய் மைப் பணியாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். மேலும், இது தவிர டி.பி.சி. பணியாளர்கள், தற்காலிக ஓட்டுநர்கள் என மொத்தம் 350 பேர் பணியாற்றி வரு கின்றனர். இந்நிலையில், அக்.31 ஆம் தேதியன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அனைவருக்கும் புத்தாடை கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்செங் கோடு முன்னாள் நகர்மன்ற தலைவர் நடேசன் அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு, புத்தாடைகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனிடையே, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களாக 4 திரு நம்பிகள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கும் ஆண்களுக்கான உடைகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் திருநம்பி தினேஷ் கூறுகையில், சமூகத் தில் கேவலமாக பார்க்கப்படும் எங்க ளைப் போன்ற திருநம்பிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்க அனைவரும் மறுத்து வரும் நிலையில், எங்களை மதித்து உழைக்க தயாராக இருந்தால், சக மனிதர்களாக மதிப்போம் என காட்டும் வகையில் வேலை கொடுத்து, தீபாவளிக்கு புத்தாடைகள் வழங்கி யுள்ள நகர்மன்ற தலைவரை மனமார பாராட்டுகிறோம். வேலை வாய்ப்புகள் இல்லாததால் கடைகளில் ஏறி, இறங்கி கைதட்டி காசு கேட்கும் நிலையை மாற்றி, எங்களுக்கு வேலை வழங்கி யது போல் இன்னும் பலருக்கும் வேலை வழங்க வேண்டும், என்றார். இந்நிகழ் வில், திருச்செங்கோடு முன்னாள் நகர் மன்றத் தலைவர் நடேசன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.