districts

img

டாஸ்மாக் கடையால் இடையூறு - வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம், ஜூன் 5- எருமப்பட்டி பகுதி பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எருமப் பட்டி பேரூராட்சியில் ஊரின் மையப் பகுதியில் 3 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடை களால் அப்பகுதியில் உள்ள குடியி ருப்புகளின் அருகே, குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதும், வீடுகளின் வாசலிலே படுத்து உறங்குவது, அதை தட்டி கேட்கக்கூடிய வீட்டு உரி மையாளர்களையும், பொதுமக்க ளையும் ஆபாச வார்த்தைகளால் திட்டுவதும், பெண்கள் மற்றும் குழந் தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதும் தொடர் கதையாக உள் ளது. எனவே, எருமப்பட்டி ஊரின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மூன்று டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும். 24 மணி நேரமும் தங்கு தடையின்றி செயல்படக்கூடிய சந்துக்கடைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியு றுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். எருமப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வாலிபர் சங்க  ஒன்றிய தலைவர் ஆர்.ராமகிருஷ் ணன் தலைமை வகித்தார். சங்கத் தின் மாவட்ட தலைவர் லட்சுமணன்  ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து  உரையாற்றினார். இதில் மாவட்ட  செயலாளர் எம்.மணிகண்டன், பொரு ளாளர் எஸ்.கே.சிவச்சந்திரன், இந் திய மாணவர் சங்கத்தின் முன்னாள்  மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் உட் பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், வாலிபர் சங்க ஒன்றிய செய லாளர் வி.பிரபு நன்றி கூறினார்.