districts

img

பீகாரில் டிஎஸ்எம்எம் அகில இந்திய மாநாடு திருப்பூரில் இருந்து பிரதிநிதிக்கு வழியனுப்பல்

திருப்பூர், நவ. 30 - தலித் சோசன் முக்தி மன்ச் (டிஎஸ்எம்எம்)  எனப்படும்  தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்குமு றைக்கு எதிரான அமைப்பின் அகில இந் திய மாநாடு பீகாரில் நடைபெறுகிறது. இம்மா நாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிக்கு வழிய னுப்பு நிகழ்ச்சி திருப்பூர் ரயில் நிலையத்தில்  நடைபெற்றது.   தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் அகில இந்திய அமைப்பான டிஎஸ்எம் எம்மின் மாநாடு பீகார் மாநிலம் பெகுசரா யில் டிசம்பர் 3ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி  வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 30  பேர் பிரதிநிதிகளாக பங்கேற்க உள்ளனர். இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி.கே.கனக ராஜும் ஒருவர். அவர் புதன்கிழமை மதியம்  12 மணியளவில் திருப்பூர் ரயில் நிலை யத்தில் இருந்து இம்மாநாட்டிற்காக புறப்பட் டுச் சென்றார். டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில்  அவர் புறப்பட்டுச் சென்றபோது, தீண்டாமை  ஒழிப்பு முன்னணியின் நிர்வாகி பா.ஞானசே கரன், மாவட்டக்குழு உறுப்பினர் இ.அங்கு லட்சுமி, மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகி  சஞ்சீவன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியம்,  வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் மகாலிங் கம் ஆகியோர் அவருக்கு வாழ்த்துத் தெரி வித்து வழியனுப்பி வைத்தனர்.