கோவை, டிச.5- மிக்ஜம் புயல் காரண மாக தலைநகர் சென்னை யில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீரமைக்க தூய்மைப் பணியாளர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மிக்ஜம் புயல் காரண மாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைக ளில் நீர் தேங்கி இருப்பதுடன், கழிவுகளும் ஆங்காங்கே தேங்கி சுகாதார சீர்கேடு ஏற் பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடுகளை சீரமைக்க தமிழ்நாடு முழுவது மிருந்து தூய்மைப் பணியாளர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங் கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவை மாநகராட்சியில் இருந்து முதற்கட்டமாக செவ்வாயன்று 400 தூய்மைப் பணியாளர்கள் சென்னைக்கு 10 பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட் டனர். மேலும், 5 லாரிகளில் தூய்மைப் பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தங்குவ தற்கு தேவையான பாய், தலையனை, உணவுப்பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், முதல் உதவி சிகிச்சை பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன. கோவை மாநக ராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், நேரடி யாக தூய்மை பணியாளர்களிடம், தூய்மை பணியின்போது மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளை சொல்லி வழியனுப்பி வைத்தார். நாமக்கல் இதேபோன்று நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு நகராட்சியிலிருந்து தூய்மைப் பணியாளர்கள் 15 பேர் மற்றும் தூய்மை ஆய்வாளர் ஒருவர் மற்றும் ராசிபுரம் நகராட்சி யிலிருந்து தூய்மைப் பணியாளர்கள் 10 பேர் மற்றும் ஆய்வாளர் ஒருவர் என 27 பேர் சென்னைக்கு அனுப்பி வைக் கப்பட்டனர். திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் மற்றும் ராசிபுரம் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் சேகர் ஆகியோர், புதிய இடத்தில் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும், தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. சேலம் சேலம் மாவட்டத்தில் இருந்து 36 மருத் துவக்குழுக்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சேலம் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சவுண்டம்மாள், நிவார ணப்பணி குழு வாகனங்களை கொடிய சைத்து அனுப்பி வைத்தார். ஒரு மருத்து வக்குழுவிற்கு நான்கு பேர் வீதம் 150க்கும் மேற்பட்டோர் மருத்துவக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். நீலகிரி இதேபோன்று நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியிலிருந்து ஆய்வாளர்கள், தூய் மைப் பணியாளர்கள் 15 பேர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் உதகை நகராட்சி ஆணையர் ஏகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.